சனி, 12 ஏப்ரல், 2025

பழந்தமிழ் இலக்கியங்களில் மருத்துவம்

    சங்க காலத்தை இயற்கை நெறிக்காலம் எனக் கூறுவது மரபு.  அக்கால மக்கள் தம் அகவாழ்வையும், புறவாழ்வையும் இயற்கையோடு இணைவாகவே அமைத்துக் கொண்டனர் என்பதே சங்க இலக்கியச் செய்தி.  இயற்கை நெறிப்பட்ட வைத்தியக் கோட்பாடுகள், மருத்துவ முறைகள், அவற்றின் மீதான நம்பிக்கைகள், மருத்துவ அறிவு என்ற பல்வேறு விஷயங்கள் சங்க இலக்கியங்களின் ஊடாகப் பெறப்படுகின்றன.

சங்க இலக்கியத்தில் மருத்துவம் தாமோதரனார், மருத்துவன் நல்லச்சுதனார் என்ற பெயர்கள் உள்ளன.  இப்பெயர்கள் யாவும் வைணவப் பெயர்களாகவே உள்ளன.  சங்கப் புலவர்களில் வான்மீகி, இடைக்காடர், தேரையர், ஐயாதிச் சிறுவெண்தேரையர், மூலர், வள்ளுவர், சல்லியங்குமரனார் போன்றவர்கள் பெயர்களும் காணப்படுகின்றன.  உள்ளத்தில் ஏற்படும் நோயைச் சிறப்பாகப் பாடிய புலவர் ‘நோய் பாடியார்’ எனப்பட்டார். 

சங்க இலக்கியங்களில் பல தொகை நூல்களாகவும், சில தனி நூல்களாகவும் விளங்குகின்றன.  அகநானூறு, புறநானூறு என்பன 400 பாடல்களைக் கொண்ட தொகை நூல்கள்.  பத்துப்பாட்டில் வரும் கபிலரின் குறிஞ்சிப் பாட்டு, நக்கீரரின் நெடுநல்வாடை, திருமுருகாற்றுப்படை என்பன தனி நூல்களாகும். 

இம்மரபை ஒட்டியே சித்த மருத்துவ நூல்கள் எழுந்துள்ளன.  பதினெண் சித்தர் நாடி சாத்திரம், சில்லரைக் கோவை, 18 சித்தர் பெரிய ஞானக் கோவை என்பன தொகை நூல்கள்.  அகத்தியர் 12000, போகர் 7000, யூகி முனிவர் 1200 என்பன தனிப் பெயரிலான நூல்களாகும்.  இவ்வாறு தொகை நூல்களாகவும் தனிப் பெயரிலமைந்த நூல்களாகவும் சித்த மருத்துவ நூல்கள் அமைந்திருக்கின்றன.

மருத்துவர்கள் மட்டுமின்றி புலவர்களும், நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களின் இயல்புகளையும் நன்கு அறிந்து செயல்பட்டு இருக்கிறார்கள்.

நிலம், நீர் விசும்பொடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம்”

என்று தொல்காப்பியப் பொருளதிகார நூற்பா இவ்வுடம்பு ஐம்பூதங்களால் ஆக்கப்பட்ட பிண்டம் என்பது தொல்காப்பியரின் கோட்பாடாகும்.  ஐம்பூதங்களின் இயல்புகள் அவற்றின் அமைப்புகள் என்பன பற்றிச் சங்க காலப் புலவர்கள் நன்கு அறிந்திருந்தனர் என்பதை,

 “மண்திணிந்த நிலனும்

நிலன் ஏந்திய விசும்பும்

விசும்பு தைவரு வளியும்,

வளித் தலைஇய தீயும்,

தீ முரணிய நீரும், என்றாங்கு

ஐம்பெரும் பூதத்து இயற்கை போல”

என்ற புறநானூற்றுப் பாடல் வரிகள் விளக்குகின்றன.

சங்க இலக்கியங்களில் போரும் வீரரும் பற்றிய செய்திகள் பேசப்படும் அதே வேளையில் போர்க் களத்திற் படுகாயமுற்றோர் பற்றிய வர்ணனைகளும் இடம்பெறவே செய்கின்றன.  எனவே காயப்பட்டோருக்குரிய இரண சிகிச்சை முறைகளும் அக்காலத்தில் இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.  “ஊனுக்கு ஊனிடல்” என்ற பழமொழியும் ஈண்டு நினைவு கொள்ளத் தக்கதாகும்.

பண்டைய நாளில் இரண சிகிச்சை முறைகளில் மருந்து மரங்களின் பட்டை, பால், இலைச்சாறு முதலியவற்றினால் பெறப்படும் மருந்துகளும் பயன்படுத்தப்பட்டன.  புறநானூற்றில் இது பற்றியதொரு குறிப்பு காணப்படுகிறது.

இரும்புச் சுவைகொண்ட விழுப்புண் நோள்தீர்த்து

மருந்துகொள் மரத்தின் வாள்வடு மயங்கி

வடுவின்றி மயங்கிய யாக்கையன்”

எனும் பாடலில் பட்டை, பால் என்பன எடுப்பதற்காக வெட்டப்பட்ட மருந்து மரத்தின் தோற்றத்திற்கும் பகை மறவரின் இரும்பாயுதங்களாற் பதம்பார்க்கப்பட்ட உடம்பினை ஒப்பிடுகிறார் இப்புலவர்.

          சங்க காலத்தில் மருந்தை “வாயுறை” என்றனர்.  வாயுறை என்பது வாய் வழியாகச் செலுத்தப்படும் மருந்து.  உணவு செரிப்பதை “அறுதல்” என்றும், வாதத்தை “வளி” என்றும், மருத்துவரைத் “தீர்ப்பான்” என்றும், மருத்துவர்க்கு உதவியாக உடன் இருப்பவரை “உழைச்செல்வோன்” என்றும் சங்க இலக்கியங்களில் காண்கிறோம்.

          தமிழர்கள் மனிதனுக்குத் துயரத்தைக் கொடுக்கும் அனைத்தையும் நோயாகக் கருதினர்.  கலித்தொகையில் சில நோய்கள் சுட்டப்படுகின்றன.  அவற்றில் ஒன்று குட்ட நோய்.  குட்ட நோயாளர்கள் காம நோய் மிக்கவர்கள் என்ற குறிப்பும், கை கால்கள் குறைவதும், நிறம் மாறுவதும் கலித்தொகையில் கூறப்பட்டுள்ளமை ஆச்சரிய மூட்டுவதாகும்.

          ‘ஒற்றடம்’ என்பது புறமருந்துகளில் ஒன்றாகச் சித்த மருத்துவத்தில் உள்ளது.  இம்முறையைப் பற்றிய செய்தி,

“. . . . . . . . . . . .  முயங்கிப் பொதிவே,

முயங்கிப் பொதிவே முலைவேதின் ஒற்றி”

என்ற கலித்தொகைப் பாடலில் வருவதைக் கொண்டு சித்த மருத்துவத்தின் பழமையை அறிய முடிகிறது.

          மேலும் சங்க இலக்கியங்களில் பசியினைப் பிணி என்றே கூறுகின்றனர்.  மருந்து மரம் அனைவருக்கும் உதவவல்லது.  அதன் இலை, பூ, காய், பட்டை, வேர் முதலியன அனைவருக்கும் பயன்படுவது.  ஒப்புரவாளனை இம்மரத்தோடு ஒப்பிடுகிறார் வள்ளுவர். 

          “வருந்திய செல்லல் தீர்ந்த திறனறி

ஒருவன் மருந்தறை கோடலின் கொடிதே”

என்கிறது கலித்தொகை.  மருத்துவன் மருந்தை மறைத்தல் ஆகாது.  நோயுற்றார்க்கு உதவுவதே கடமையென உணர்தல் வேண்டும். அங்ஙனம் இல்லாதல் பாவமாகக் கருதப்பட்டமையை மேற்கண்ட பாடல் வரிகள் உணர்த்துகின்றன.

          அதியமான் அடைதற்கு அரிதான உயர்ந்த மலையின் உச்சி முடிவிலிருந்து பறித்துக் கொண்டு வரப்பெற்ற நெல்லிக்கனியை ஔவைக்குப் பரிசாகக் கொடுத்தான்.  நெல்லிக்கனியின் மகத்துவத்தை அறிந்ததால் மருத்துவ நூல்கள் நெல்லிக்கனியை “நல்வாழ்வுக்கனி” எனக் கூறுகின்றன.

          பிளைனி என்னும் அறிஞர் மிளகினை “இந்திய மருந்து” என்றார்.  இஞ்சி, மஞ்சள், மிளகு போன்ற மூலிகைகளைப் பற்றி எண்ணற்ற மருத்துவக் குறிப்புகளை இலக்கியங்கள் கொண்டுள்ளன.  திருக்குறளில் மருத்துவம் பற்றிய கருத்துக்கள் “மருந்து” என்னும் தலைப்பில் 95ஆவது அதிகாரம் அமைந்துள்ளது. 

இதில் நோய் வகைகள், அவை வரும் வழிகள், அவற்றை நீக்கும் வழி முறைகள், மருந்தின் வகைகள் ஆகியன பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.  மேலும், வளி முதலானவைகளால் அதிகம், குறைவு காரணமாகவே நோய் தோன்றும் என்பர்.  அடுத்து வரும் குறட்பாக்களில் நோய் வராமல் தடுக்கும் உணவு முறைகளும், கடைசி மூன்று பாடல்களில் மருத்துவர்களின் கடமை பற்றிய செய்திகளும் உள்ளன.  இவை இன்றும் பொருத்தமானவைகளாகவே இருக்கின்றன.

          கண்டங்கத்தரி வேர், சிறுவழுதுணைவேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர், நெருஞ்சி வேர் என்பன ‘சிறுபஞ்சமூலம்’ எனப்படும்.  இவ்வகை வேர்கள், உடல் நலத்தைக் காக்கும்.  அறவழிப் பாடல்கள், சமுதாயத்தைத் தீங்கிலிருந்து நீக்கி இன்பமயமாக்கும் என்ற காரணத்தால் இப்பெயர் பெற்றது.

          ‘திரிகடுகம்’ என்பது சுக்கு, மிளகு, திப்பிலி என்பதாகும்.  இவற்றைக் கொண்டுள்ள மருந்துகளால் உடல்  பயனடைவது போல, இந்நூலால் மக்கள் பயனடைவர்.

          ஏலக்காய், உடலில் உள்ள செரிமானத்தைத் தூண்டும் பொருளாகும்.  இதை அடிப்படையாக உள்ள மருந்து போல ‘ஏலாதி’ என்ற நூலும் சமுதாயத் தீங்குகளை நீக்கும்.

          இவையாவும் சமணர்களால் இயற்றப்பட்டவையாகும்.  பொதுத் தொண்டாற்றிய சமணர்கள் மருத்துவத்தை அறமாகக் கருதிச் செயல்பட்டனர்.  ‘ஔடதானம்’ என்று மருந்துகளை வழங்குவது அவர்களின் அடிப்படைச் சமயக் கோட்பாடுகளில் ஒன்றாகும்.

          திருமூலர் திருமந்திரத்திலும் மருத்துவத்தைப் பற்றிக் கூறியுள்ளது பக்தி இலக்கியத்துள் பத்தாம் திருமுறையாகப் போற்றப்படும் திருமந்திரம் மக்களுக்குத் தேவையான பல பொது மருத்துவக் குறிப்புக்களைக் கூர்ந்து பார்க்கும்போது திருமூலரின் மருத்துவ நுட்பம் புலப்படும்.

          திருமந்திரம் இரண்டாம் தந்திரத்தில் அகத்தியர் வரலாறு கூறப்பட்டுள்ளது.  ‘கர்ப்பக் கிரிகை’ என்னும் தலைப்பில் குழந்தைப்பேறு பற்றிய செய்தி இடம்பெற்றுள்ளது.  இதில் கருவில் ஏற்படும் பல்வேறு நோய்கள் கூறப்படுகின்றன.  மந்தன், ஊமை, பார்வை இல்லாமல் பிறத்தல், அலி என்ற பிறவி ஊனங்கள் கருவிலேயே ஏற்படுவதாகவும், கலவியின் போது ஏற்படும் மூச்சுக் காற்றே இதற்குக் காரணம் என்றும் விளக்கியுள்ளார்.  மேலும், இருமல், சோகை, ஈளை, வெப்பு, உருமும் இடி போன்ற நாமுரோணி கழலை என்பன பற்றியும் கூறுகின்றார்.  மேலும் கழலை, சிரங்கு, குட்டம், வாதம், கூனல், முடம், வீக்கம் என்பன பற்றியும் கூறுகின்றார்.  இதுவும் தனஞ்சயன் என்ற காற்றால் ஏற்படும்.  தனஞ்சயன் என்ற வாயுவின் அளவு 224 அளவாக இருத்தல் வேண்டும்.  10 வாயுக்களில் தனஞ்சயன் ஒன்பதாவதாக இருக்கும்.  காய கற்ப முறைகள் பற்றியும் வருகின்றன.  இதில் சரப் பயிற்சியானது முதலிடம் பெறுகின்றது.  அமுரிதாரணை என்ற பிரிவில் ‘சிவநீர் பருகில் ஓராண்டு ஊனம் வராது’ என்று தடுப்பு மருத்துவம் பற்றியும் விளக்குகின்றார்.  100 எண்ணிக்கை மிளகு, சிவநீர் என்ற இவற்றைக் கலந்து அருந்தினால், மயிரானது விழுந்து மீண்டும் கருமை நிறமாக முளைக்கும்.  மிளகு, நெல்லி, மஞ்சள், வேம்பு இவற்றைப் பயன்படுத்த உடல் இறுகும் என்றெல்லாம் தன்னுடைய திருமந்திரத்தில் திருமூலர் சித்த மருத்துவத்தை எடுத்துக்காட்டி இருக்கின்றார். 

          கண்ணில் வரும் கண் புரைக்கும் மற்றும் புள்ளி வழுதலுக்கும், வாயுக்களுக்கும் தொடர்பு இல்லை என்று கூறும் திருமூலர்,

          “கண்ணில் கூர்மன் கலந்திலன் ஆதலால்

          கண்ணில் சோதி கலந்ததும் இல்லையே”

என்பதிலிருந்து கண்ணிடம் கூர்மன் என்ற வாயு பொருந்தாவிடில் கண்ணில் நோய் உண்டாகி ஒளியும் இல்லாமல் போய்விடும் என்று மருத்துவ நோக்கில் கூறியுள்ளதைக் காணலாம்.  மேலும் மனத்தால் இயங்குபவனே மனிதன்.  அட்டாங்க யோகத்தினை மேற்கொண்டால் மனிதன் உள்ளம் பண்பட்டு ஆரோக்கியமான உடலினைப் பெறலாம் என்பது திருமந்திரத்தின் கூற்றாகும்.

நந்தி தேவரின் மாணவரான திருமூலர் உயிரின் இயக்கம் பற்றியும், மூலாதார சக்திகள் முதலான செய்திகள் பற்றியும் மருத்துவ நோக்கில் கூறியுள்ளார்.

          தமிழில் உள்ள 96 வகைச் சிற்றிலக்கியங்களில் சித்த மருத்துவம் பற்றிய செய்திகள் பல உள்ளன.  எடுத்துக்காட்டாக, குறவஞ்சி இலக்கியத்தில் மலையில் உண்டாகும் மூலிகைகளைப் பற்றிய விவரங்களும், கலம்பகத்தில் சம்பிரதம் சித்து என்ற பிரிவும், பள்ளு இலக்கியத்தில் வசிய மருந்துகளும் வருகின்றன.  மேலும் சித்தர்கள் வரலாறும் பல நூல்களில் காணப்படுகின்றன.  முத்தானந்தர் ஞானக் குறவஞ்சியில் ஆனந்தர், கவசை சித்தர், சதாசிவ குரு, சித்தாதி சித்தர், சிவயோக முனி, துதிக்கை முனி, நவகோடி சித்தர், நவநாத சித்தர், வயிரவர், மச்சமுனி, போகர், சட்டைமுனி, கொங்கணர், திருமூலர், பிரமமுனி, நந்தீசர், கோரக்கர், இடைக்காடர், கமலமுனி, காக்கை முனி, தன்வந்திரி, கும்பமுனி, தேரர், கொங்கண சித்தர் ஆகிய சித்தர்களின் பெயர்கள் காணப்படுகின்றன.

          முத்தானந்தர் ஞானக்குறவஞ்சி, கந்தசாமி காதல், சிதம்பரக் குறவஞ்சி ஆகிய நூல்களில் சித்த மருத்துவ நூல்களில் கூறப்படாத பல அரிய மூலிகைகள் காணப்படுகின்றன. அவைவருமாறு:

வியல்மூலி, மருசேந்தி, சீமர்மூலி, கவுரி, வெள்ளைச்சாரை, சாகாதமூலி, திருவாரை, சஞ்சிவிப்பாலை, வெண்மிருகமூலி, ஓரிதழ்த்தாமரை, பாலை, கருவேலி, கொடிவேலி, பாம்பை, வெள்ளி, விலை, மயிப்பூட்டு, செந்தலாக்கு, பொருசன், பயிரன், பாராட்டன், தரிசனவேதி, பரிசனவேதி, நவதள வில்வம்.

இம்மூலிகைகள் விளையும் மலைகளாக அத்தகிரி, அறிவின்மலை, அழகர்மலை, ஆறுமலை, யிலை மலை, சோமசிரிமலை, ஆனைமலை, இளையகிரி, உதயகிரி, கண்டமலை, தம்பிரான்மலை, திருமலை, திருவண்ணாமலை, துரகமலை, தோகமலை, நாகமலை, நீலகிரி, மகாமேரு, மணமூர்த்திமலை, மேகமலை, மோட்சகிரி, வெள்ளகிரி ஆகிய மலைகளின் பௌர்களும் காணப்படுகின்றன.

மூலிகைகளால் இளமை பெறலாம் என்ற செய்தியும், காய கற்பம் பற்றிய கருத்துக்களும் சிற்றிலக்கியங்களில் வருகின்றன.  கஞ்சமலையில் நடந்த ஒரு நிகழ்ச்சியைக் கொங்கு மண்டல சதகம் விளக்குகின்றது.  ஆசிரியருக்காக மாணவன் உணவு சமைக்கின்றான்.  உணவு கருப்பு நிறமாக இருக்க, வேறு உணவை ஆக்கும் முன்னர் அதை உண்ணுகின்றான்.  இளமையை அடைகின்றான்.  இதை அறிந்த ஆசிரியர் வாந்தி செய்யச் செய்து, எச்சில் சோற்றை உண்ணுகின்றார்.  அவரும் இளமை பெறுகின்றார் என்பதான ஒரு நிகழ்ச்சி கொங்கு மண்டல சதகத்தில் வருகின்றது.

நோய்கள் ஏற்படும் வழிகள் சிற்றிலக்கியங்களில் கூறப்படுகின்றன.  குமரேசர் சதகத்தில் கல்லினால், மயிரினால், மீதூண் விரும்பலால், கடுவழி நடக்கையால், மலசலங்கள் அடக்குதலால், கனி பழங்கறி உண்ணலால், நெல்லினால், உமியினால், உண்டலால், மூழ்கலால் நோய்கள் உண்டாவதையும் உணவு பற்றிய கெடுதல்களையும் காணமுடிகிறது.  மேலும், உறக்கமில்லாமை, மன உளைச்சல், பனிக்காற்று, மாசடைந்த நீரைப் பருகுதல், இள வெளியிலில் காய்தல், மிகு கலவி, அதிகமான சுமையைத் தூக்குதல், இரவில் தயிர் ஊற்றி உண்ணல் போன்ற செயல்களும் நோய்கள் தோன்றக் காரணங்களாகும் என்பர்.

குட்டநோய், பெருநோய், வாதம், குன்ம நோய், முற்றி சலநோய், கண்ணோய், முயலகன், முடநோய், ஐயம், படுகசம், குன்மம, பன்மூலம், அகற்றி மெய்யில், ஐ அம்படும் சகம்போல வலியீந்து, இடுமருந்து, அதில் சேரும் மருந்துச் சரக்குகள், புலித்துடரி, பேய்த்துடரி, நெல்லி, மேல் கொத்தான், மலைகலக்கி, கோபுரம் தாங்கி, ஆண்துடரி, பெண்துடரி, கற்றாழை, நன்னாரி வேர், பெரியா நங்கை, சிறியா நங்கை, செந்நாயுருவி, தேள்கொடுக்கு, ஆனைவணங்கி, முரட்டு ஆள் வணங்கி, பேய் வணங்கி, பூனைவணங்கி, புலி வணங்கி, கஞ்சா, மிளரகணை, தொட்டால் சுணுங்கி, துடமுறுக்கி, சலந்திரட்டி, நின்று சிணுங்கி, பொன் ஊமத்தை, நிலம் புரண்டி, நீர்மேல் நெருப்பு, புலம்பி, அழுகண்ணி, வாதமடக்கி, முடக்கொத்தான், தொழுகண்ணி, துளசி, வெதுப்படக்கி, பேய்மிரட்டி, வேலி, பாசி ஆகிய மூலிகைகளின் பெயர்கள் பேரூர்ப் புராணம், நாகையந்தாதி, சிதம்பரேசுரர் விறலிவிடுதூது ஆகிய நூல்களில் காணப்படுகின்றன.

சித்தர்கள்

சித்தர் சிவலோகம் இங்கே தரிசித்தோர்

சத்தமும் சத்த முடிவுந்தம் முள்கொண்டோர்

நித்தர் நிமலர் நிராமயர் நீள்பர

முத்தர்தம் முத்திமுதல் முப்பத் தாறே”

என்று கூறும் திருமூலரின் வாக்குப்படி சித்தர் என்போர் இப்பிறவியிலேயே சிவ லோகத்தைக் கண்டுகளித்தவர்கள் ஆவர். என்றும் நிலையாக வாழ்பவர்,  குற்றம் இல்லாதவர், நல்வினை தீவினைகளிலிருந்து நீங்கியவர், மேலான முக்தியை அடைந்தவர்கள், முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்த பெருமையை உடையவர்கள் ஆவார்கள். மேலும் சித்தர்கள் என்றால் சித்தி பெற்றவர்கள், பேறு பெற்றவர்கள், வீட்டின்பம் அடைந்தவர்கள் என்று பொருள் கொள்ளலாம்.

          “சித்” என்றால் அறிவு எனப்படும்.  சித்தை உடையவர்கள் “சித்தர்கள்”.  அறிவு படைத்தவர்கள் “அறிஞர்”, நுண்ணறிவு படைத்தவர்கள் “மெஞ்ஞானிகள்” என்றும் கூறலாம்.

          இறைவனைக் காண முயல்பவனைப் பக்தர் என்றும், கண்டு தெளிந்தவரைச் சித்தர் என்றும் தேவாரம் பாகுபடுத்திக் காட்டுகிறது.  மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்பவற்றுள் சித்தம் எனப்படுவது எண்ணியதைத் திண்ணமாக முடிப்பது.  இறைவனை அடைந்தே தீருவது என்பது வைராக்கியம்.  “சித்தமாம் வைராக்கியத்தில் சித்து” எனப்படும் உணர்வுடன் கூடி இறையனுபவத்தில் திளைப்பவர்களே சித்தர்கள் எனலாம்.

          நம் நாட்டில் அநேக சித்தர்கள் இருப்பினும் பதினெண் சித்தர்களைச் சிறப்பித்துக் கூறுவதைக் காணலாம்.  பதினெண் சித்தர்களின் பெயர்கள் வித்தியாசப்படுகின்றன.  இடைச்செருகல் காரணமாக பதினெண் சித்தர்கள் இவர்கள்தான் என்று அறுதியிட்டுக் கூற இயலாதவாறு உள்ளனர்.  கருவூரார் பலதிரட்டில் கூறப்பட்டுள்ள பதினெண் சித்தர்கள் பற்றிப்,

          “பார்த்திடவேநந்தீசர் மூலத்தீசர்

                    பண்பானஅகத்தீசர் சட்டைநாதர்

          போர்த்திடவேபதஞ்சலியும் ஊனர்கண்ணர்

                    கோரக்கர் கமலமுனி சண்டிகேசர்

          கூர்த்திடவேஇடைக்காடர் சிவாயசித்தர்

                    கொங்கணவர் தந்தையவர் போகநாதர்

          காத்திடவேமச்சமுனி பிண்ணாக்கீசர்

                    காலாங்கி சுந்தரரும் காப்புத்தானே”

என்ற காப்புப் பாடலால் கருவூரார் குறிப்பிடும் பதினெட்டுச் சித்தர் பெயர்களை அறிகிறோம்.  அபிதான சிந்தாமணி, அகத்தியர், போகர், கோரக்கர், கைலாசநாதர், சட்டைமுனி, திருமூலர், நந்தி, கூன்கண்ணர், கொங்கணர், மச்சமுனி, வாசமுனி, கூர்மமுனி, கமலமுனி, இடைக்காடர், பிண்ணாக்கீசர், சுந்தரானந்தர், ரோமரிஷி, பிரம்மமுனி ஆகியோர்களைப் பட்டியலிட்டுக் காட்டுகிறது.  இவ்வாறு வெவ்வேறு விதமான பதினெண் சித்தர்களின் பெயர்களைக் குறிப்பிடுவதால் பதினெண் சித்தர்கள் யார் என்பதை உறுதியாகக் கூற முடியாத நிலை உள்ளது.  இருப்பினும் இவர்கள் எல்லோரும் சித்தர்களாகவே வாழ்ந்திருக்கின்றார்கள் என்பதற்கு இலக்கியம் மற்றும் மருத்துவச் சான்றுகள் கிடைக்கின்றன.

          சித்தத்தைப் பண்படுத்தி, தன்வயப்படுத்தி, ஆட்கொண்டு, மனோ சக்தியைப் பெரிய அளவில் ஊக்குவித்து, சித்தத்தால் அடைய வேண்டியவற்றையும் அடைய வல்லவர்கள் “சித்தர்கள்” ஆவர்.  காய கற்பங்கள் உண்டு சமாதி நிலையில் நின்று மாறா இளமையையும், அழியா உடலையும், எல்லையற்ற மனோ சக்தியையும் பெற்றவர்கள், எல்லாம் வல்ல, எல்லாம் தெரிந்த “இறையாப் பெருவாழ்வு” வாழ்பவர்கள்.

சித்த மருத்துவம்

          இயற்கை சக்திகளை மனோ பலத்தால் கட்டுப்படுத்தி சித்துக்கள் விளையாடுபவர்கள் சித்தர்கள்.  அச்சித்தர்களால் உருவாக்கப்பட்டதுதான் “சித்த மருத்துவம்”.  சித்த மருத்துவமே பார்வதி பரமசிவன் மூலமாக நந்திக்குச் சொல்லப்பட்டு நந்தி மூலமாகத் திருமூலர் பெற்றதுதான் என்று புராணக்கதை ஒன்று உண்டு.  மேலும் சித்த மருத்துவ முறையை இறைவன் (சிவன்) உமாதேவிக்கும், உமாதேவி முருகனுக்கும், முருகன் நந்திக்கும் முறையே உபதேசிக்க, நந்தி மூலம் சித்தர்களுக்கு உரைக்கப் பெற்றது என்றும் கூறுவர்.

இவ்வாறாக பரப்பப்பட்ட சித்த மருத்துவம் சித்தர்களிடையே பரவலாகக் காணப்பட்டு சித்தர்களினாலே சித்த மருத்துவம் தோன்றியது எனலாம்.  

தமிழிலக்கியச் செய்திகளினூடாகச் சித்த மருத்துவ வரலாற்றை முன்னோக்கிப் பார்க்கும் போது பல்லவர் காலம் முதல் வடமொழி மூலமாகச் சித்த மருத்துவக் கலை பேணப்பட்டதாக அறியலாம்.  பல்லவர் காலத்திலும், சோழர் காலத்திலும் சங்கத மொழியே ஆட்சி மொழியாக இருந்தது.  பிராமணரே கல்வியில் மேலோங்கிக் காணப்பட்டனர்.  இவ்வித காலப் பகுதிகளிற் சங்கத மொழி மூலமே சித்த மருத்துவக் கலை வளர்ச்சி பற்றிய செய்திகள் அறியப்படுகின்றன.  பிராமண ஆதிக்கம் வலுக்குன்றிய போது, தமிழ்ச் சித்தர் பரம்பரை 12ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் தமிழர் சமூகத்தில் செல்வாக்குப் பெறுவதைத் தமிழர் சமூக வரலாறு எடுத்தியம்புகிறது.  எனவே தமிழ்ச்  சித்தர் காலத்துடன் சித்த மருத்துவம் தமிழ்மொழி மூலமாக வளர்ச்சி பெறுவதாயிற்று.  சித்தர் பாடல்களிற் சங்க மொழியிலான மூலிகைப் பெயர்கள், மருந்துப் பெயர்கள் காணப்படினும் அது கால நியதிப்பட்ட தவிர்க்க முடியாத நிலை எனலாம்.  பாண்டியர் காலச் சாசனங்களில் (கி.பி.13ஆம் நூற்றாண்டு) சோமநாத தேவர், அகோரசிவ முதலியார் முதலிய வைத்தியச் சக்கரவர்த்திகளின் பெயர்கள் இடம்பெற்று உள்ளமையை நோக்குமிடத்து, பிராமணரல்லாதோரும் தமிழ் மூலம் படித்துப் பயன்படத் தக்க வகையிலே தமிழ் மொழியில் மருத்துவக் கலை வளர்ந்திருக்க வேண்டும் என்ற ஊகத்தை இவை சான்றுபடுத்துகின்றன.

சித்தர்களை நிறைமொழி மாந்தர் எனக் குறிப்பிடுகின்றார் தொல்காப்பியர்.  மணி மந்திர ஔடதங்களில் வல்லவரான சித்தர்களை ‘நிறைமொழி மாந்தர்’ என்பதும் பொருத்தமானதே.

          “இருநிலப் புகுதலும் ஒருவிசும் பிவர்தலும்

          வருதிரை நெடுங்கடல் வாய்கொண் டுமிழ்தலும்

          மந்திர மேந்தலு மென்றிவை பிறவும்

          பண்டியல் விச்சை பயிற்றிய மாக்களைக் கண்டுமிதும்”

இவ்வாறு இலக்கியச் சான்றைப் பார்க்கும்போது அகத்தியர் காலம் முதலாக தமிழர் பண்பாட்டில் சித்தர் பற்றிய சிந்தனைகளும், சித்தர் கோட்பாடுகளும், அவர்களது செயல்களும் இடம்பெற்று வந்துள்ளமை அறியப்படுகின்றது.  ஆயினும் இன்று நமக்குக் கிடைக்கும் ‘சித்தர் பாடல்கள்’ இயற்றப்பட்ட காலம் கி.பி.10ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டதெனலாம்.

          பண்டைக் காலத்தில் இலக்கண நூல்களை இயற்றிய ஆசிரியர்களே மருத்துவ நூல்களையும் இயற்றினர் என்ற கருத்தும் நிலவுகிறது.  வடமொழியிற் பதஞ்சலி என்பார் ‘மகாபாஷ்யம்’ என்ற வடமொழி இலக்கண நூலை இயற்றியதுடன் பல மருத்துவ நூல்களைத் தொகுத்தளித்துள்ளார்.  இது போன்றே அகத்தியர் ‘அகத்தியம்’ என்ற முதற்றமிழ் இலக்கணநூல் ஆக்கியதுடன், ‘அகத்திய வாகடம்’ முதலான பல மருத்துவ நூல்களை ஆக்கியளித்தார் எனலாம்.

          இவ்வாறாகத் தமிழ்ச் சித்தர்கள் மூன்று பெரும் பிரிவுக்குள் அடங்குவர்.  முதல் வகையினர், வேத மறுப்பு ஆன்மீக ஞானம் பாடியோர்.  சாதி இருப்பை மறுத்துக் கலகம் புரிந்தோர். இரண்டாம் வகையினர், வேதச் சார்புடைய ஆன்மீக ஞானம் பாடியோர்.  இவர்கள் சாதி மறுப்பை முன் வைக்கவில்லை.  தனி மனிதப் பாவங்களாகவே வாழ்வைப் பார்த்தனர்.  (இவர்கள் தத்துவ நிலையில் ஆதிப்பொருள் முதல் வாதிகள்).  மூன்றாவது வகையினர், மருத்துவம் பாடியோர்.  சாதி மறுப்பாளர்கள்.  இந்த மூவரையும் ஒரே தரத்தில் வைத்துப் பார்த்தால் சித்தர் பற்றிய ஆய்வு முன்னேற்றத்துடன் ஏற்படவில்லை எனக் கருத இடமளிக்கிறது.

          வேதமறுப்பு ஞானம் பாடிய சித்தர்களும், மருத்துவ ரசவாத சித்தர்களும் இருவேறு வகைப்பட்டவர்கள்.  தத்துவ அடிப்படையில் ஞானம் பாடிய சித்தர்களில் இருந்து மருத்துவச் சித்தர்கள் அடிப்படையில் வேறுபட்டவர்கள்.  முரண்பட்டவர்கள்.  ஞானம் பாடிய சித்தர்கள் தத்துவ ஞானத் துறையில் கருத்து முதல்வாதிகள், இறை சக்தியை ஒப்புக் கொண்டவர்கள்.  மருத்துவ ரசவாதச் சித்தர்கள் பொருள் முதல் வாதிகள்.  ஆனாலும், வேதமறுப்பு ஞானம் பாடிய சித்தர்களிடமும் மருத்துவ சித்தர்களிடமும் சில பொதுத் தன்மைகளும் உண்டு.  இந்த இருவகையினருமே பாமர மக்களுக்காக உழைத்தவர்கள்.  இரு பிரிவினரும் யோகப் பயிற்சியை மேற்கொண்டவர்கள்.

          மருத்துவ – ரசவாத சித்தர்கள் பிரபஞ்சத்தையும், மனித உடற்கூற்றையும் பொருள் முதல்வாதத் தத்துவ நிலையில் நின்று விளக்கினர்.  அவர்கள் இரசவாதிகள்.  ரசவாதமும், மருத்துவமும் ஆதி அறிவியல் ஆகும்.

          பஞ்ச பூதங்களின் கூட்டுறவும், ஐந்து பூதங்களின் சேர்க்கையின் அளவும் காரணமாகவே நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள் தோன்றுகின்றன.  எல்லாப் பொருளிலும் ஒரு குறிப்பிட்ட அளவு விகிதத்தில் இந்தப் பூதங்களின் சேர்க்கை உள்ளது.  அளவு விகிதத்தில் ஏற்படும் மாறுதல்கள் காரணமாகவே இயற்கையில் மாறுதல்கள் ஏற்படுகின்றன என்பதே மருத்துவச் சித்தர்களின் பொருள் முதல் வாதத் தத்துவ ஞானமாகும்.  பிரபஞ்சத்தை அறிய முடியும்.  அதோடு அவற்றின் மீது செயல்பட்டு  இயற்கையை மாற்றி அமைக்க முடியும்.  மாற்றி அமைக்கக் கூடிய செயலும் பஞ்சபூதக் கோட்பாட்டுக்குட்பட்ட இயற்கை வழியே என்பது மருத்துவ இரசவாத சித்தர்களின் கோட்பாடாகும்.

          இயற்கையோடு இணைந்த வாழ்க்கை நடத்திய மக்கள் இயற்கைச் சூழலிற் காணப்பட்ட மரம், செடி, கொடி, புல், பூண்டு, இலை, காய், கனி, பூ, பிஞ்சு ஆகியவற்றை இனங்கண்டு நன்கு தெரிந்து வைத்திருந்தனர்.  குறிஞ்சிப் பாட்டில் 98 வகையான தாவரப் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளமையை நோக்கும் போது அக்கால மக்கள் தாவரங்களின் இனங்களில் எவ்வளவு தூரம் பயிற்சி பெற்றிருந்தனர் என்பது தெளிவாகிறது.

          கி.பி. 8ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட காலப் பகுதியில் புறச் சமயங்களாகச் சமணமும் பௌத்தமும் தமிழ் நாட்டில் செல்வாக்கு பெற்றிருந்த வேளையிலே தத்தம் சமயத்தைப் பரப்பும் நடவடிக்கைகளிற் கல்வியையும், மருத்துவத்தையும் துணையாகக் கொண்டனர்.  அதன் பயனாக மருத்துவக் கலை பேணப்பட்டது.  தம்சமயக் கருத்துக்களைக் கூறும் நூல்களுக்கும் மக்களிந்த மருந்துப் பெயர்களையே சூட்டினர்.  அவ்வகையில் அமைந்த இலக்கியப் பெயர்களே திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி ஆகிய மூன்றுமாம்.          மனிதனைத் தாக்கக் கூடிய முப்பிணிகளாக சித்தர்கள் உடற்பிணி, உயிர்ப்பிணி, பிறவிப்பிணி எனக் கூறியுள்ளனர்.  இவ்விதம் நோயை மூன்றாகப் பிரித்தது போலவே மருத்துவத்தையும் தேவ மருத்துவம், மனித மருத்துவம், அசூர மருத்துவம் எனவும் பிரித்துள்ளனர். சித்தர் தத்துவம்,

          “பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்

          அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து”                            

என்பதால் பசிப்பிணியும், உடற்பிணியும் இல்லாதிருந்தாலே நல்ல சமுதாயம் என்கின்றார் வள்ளுவப் பெருந்தகை.

          சித்த மருத்துவம் என்பது தமிழ்ச் சித்தர்களால் உருவாக்கப்பட்ட ஒப்புயர் பெற்ற ஒரு மருத்துவ முறையாகும்.  அதன் அடிப்படைத் தத்துவங்கள் அனைத்தும் அனுபவ ரீதியானது.  உணவே மருந்து, மருந்தே உணவாக அமைந்துள்ளது தான் சித்த மருத்துவம் ஆகும்.  ஆதி மனிதன் ஒரு மூலிகையைத் தான் மருந்தாக முதன் முதலில் பயன்படுத்தி இருக்க வேண்டும்.  ஏனெனில் மூலிகைகள் எங்கும் வளர்பவை.  எளிதில் கிடைப்பவை.  நோயுள்ள நாய்கள் குடற்புழுவை வெளிக்கொண்டு வர புல்லைத் தின்று வாந்தி எடுப்பதும், பாப்பு கடியுண்ட கீரிப் பிள்ளை பச்சிலையைத் தின்று விஷத்தை முறித்துக் கொள்வதும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் ஆதி மனிதனுக்கு மூலிகை அறிவை ஊட்டிய பாடங்களாகும்.  எனவே தமிழகத்தில் செடி, கொடிகள் தோன்றிய காலமே சித்த மருத்துவம் தோன்றிய காலம் எனலாம்.

          தொன்மை மிக்க இம்மருத்துவம் பல சிறப்புக்களை உடையது.  சித்த மருத்துவத்தில் பிணி அணுகா விதியும் மிக முக்கியமானதாகும்.  ஒவ்வொரு நோய்க்கும் உரிய மருந்தைத் தாவரங்களே தந்தாக வேண்டும் என்று காலங் காலமாக சித்த மருத்துவர்கள் நம்பி வந்துள்ளனர்.  குருதியின் அதிக அழுத்தத்தைக் கரைக்கும் சர்ப்பகந்தி முதல் தீராத சுவாச காசத்தை கட்டுப்படுத்தும் நஞ்சறுப்பான வரை தாவரங்களே.  விரதம் என்கிற பெயரில் பட்டினி இருந்து சீரான உறுப்புக்கு ஓய்வு கொடுத்த பின் விரதம் முடிக்க அகத்திக்கீரை உண்பது விரதத்தால் ஏற்பட்ட சூட்டைத் தணிக்கவே ஆகும்.  பருப்பு போன்ற வாயுப் பண்டங்களைச் சமைக்கும்போது பெருங்காயம் சேர்ப்பது, வாளைமீன் கறிக்குப் பூண்டு கூட்டுவது, இறைச்சிப் பொருள்களுக்கு அதன் கவிச்சியை நீக்கப் பெருஞ்சீரகம் சேர்ப்பது, முட்டைக்கு மிளகுத்தூள் சேர்ப்பது போன்ற பலவும் அறிவியல் அடிப்படையில் அமைந்த ஒன்றாகும்.

          மேலும் மருந்துகளை அகமருந்து, புறமருந்துகளாகவே கொடுத்துள்ளனர் சித்தர்கள்.  இவ்விருவகை மருந்துகளும் தத்தம் வகையில் முப்பத்திரண்டு வடிவுடையனவாகும்.

          சித்தர்கள் நோய்களை நாடிகளின் மூலமே அறிந்தனர்.  வாதம், பித்தம், கபம் போன்ற நாடிகளைக் கொண்டே எவையெவை அதிகம், குறைவு என்ற அளவுகளைக் கண்டறிந்து நோய்களை முடிவு செய்தனர்.  சித்த மருத்துவத்தில் அகத்தியர் இரத்தினச் சுருக்க நாடியின் பிரகாரம் மொத்தம் 4448 நோய்கள் என்று கூறுகிறார். 

              இவ்வாறாக சிறப்பு வாய்ந்த சித்த மருத்துவமானது முதலில் மரபுவழி மருத்துவமாகவும், பரம்பரை மருத்துவ முறையாகவும் கூறப்பட்டு பின்பற்றப்பட்டது.

சனி, 2 நவம்பர், 2024

மின்னூல்கள்

 

அக்னிப்பூ


ASIN  :  B0DF58KTG5

அக்னிப்பூ என்பது ஆசிரியப்பா நடையில் அமைந்த கவிதைக் கதை. சமுதாயத்தில் உயர்சாதி பெண்ணுக்கும் கீழ்ச்சாதி பையனுக்கும் உருவான காதலை பெற்றோர்கள் ஏற்று உரிய முறையில் திருமணம் செய்து வைப்பதற்கு கதாநாயகன் மேற்கொள்ளும் முயற்சிகளைப் படிப்படியாக விவரிக்கும் நிகழ்வைக் 931 அகவல் வரிகளில் 14 காட்சிகளில் எடுத்துரைப்பதாகஇக்கதை அமைக்கப்பெற்றுள்ளது.  விலை ரூ.100/-.


அமுதரஸ மஞ்சரி


ASIN  :  B0DJD6VZXV

இந்நூல் தளவாய் திருமலையப்பர் என்பவரைப் பற்றி எழுதப்பட்டது. தளவாய் குமாரசாமி முதலியாரின் தத்துப் பிள்ளையாக வளர்ந்தார்.  இவரின் நிர்வாகத் திறமையைக் கண்டு தன்னுடைய மகளைக் கொடுத்து தான் வகித்து வந்த தளவாய்ப் பட்டத்தையும் திருமலையப்பருக்குக் கொடுத்தார். அன்று முதல் திருமலையப்ப முதலியார் 'தளவாய் திருமலையப்ப முதலியார்' ஆனார். தளவாய் முதலியாரின் வீரம், தானம், குணங்கள், சிறப்புகள் ஆகியவற்றை நூல் நயம்பட உரைக்கிறது.  குறிப்பாக அவர் செய்த கோயில் திருப்பணிகளைப் பட்டியல் போட்டுத் தருகிறது. 370 கண்ணிகளால் ஆனதுஓலைச்சுவடியிலிருந்து இந்நூல் பதிப்பிக்கப்படுகிறதுவிலை ரூ.100/-.


ஆசிரியர் மங்கலங்கிழார் வாழ்வும் வாக்கும்


ASIN  :  B0DHG8GLV5

தமிழகத்தின் வடவெல்லையில் இந்திய விடுதலைக்குப் பிறகு தமிழர்கள் தெலுங்கு பயிலவேண்டிய சூழ்நிலை இருந்ததை மாற்றிய பெருமகான் வடவெல்லை மீட்புத் தந்தை மங்கலங்கிழார் ஆவார். தமிழர்களின் உரிமையை தமிழர்களுக்கு மீட்டுத் தந்தவர். தமிழக வடவெல்லையில் தமிழர் தமிழ்ப் படிக்க இயலாத சூழ்நிலையில் தானே அறநெறித் தமிழ்க் கழகம் உருவாக்கி ஊர் தோறும் சென்று மாணவர்களுக்குத் தமிழ்ப் பாடம் நடத்தி பல ஆசிரியர்களை உருவாக்கிய பெருமானார் மங்கலங்கிழார். அவருடைய வாழ்க்கையைப் பற்றியும் வாக்குகள் பற்றியும் எடுத்தியம்புவதாக ஆசிரியர் மங்கலங்கிழார் வாழ்வும் வாக்கும் என்னும் இந்நூல் அமைந்துள்ளது. விலை ரூ.125/-.


இதழ்ப் பதிப்பு நூல்கள் (பகுதி 1)


ASIN  :  B0DF52VFXG

இதழ்களில் வெளிவந்த ஆத்திசூடித் திறவுகோள், கனா நூல், கனவு நூல், குமாரபுரி மும்மணிக்கோவை, குருபரம்பரை அகவல், திருவாவடுதுறைக் குருபரம்பரை அகவல், திருத்தொண்டர் மாலை, திருப்புல்லாணி திருவனந்தல், பழனிமலை வடிவேலர் பதிகம், முருகாற்றுப்படை என்ற நிலையில் அணி முருகாற்றுப்படை-1, அருள் முருகாற்றுப்படை-1, அணி முருகாற்றுப்படை-2, அருள் முருகாற்றுப்படை-2, வருமுருகாற்றுப்படை-1, வருமுருகாற்றுப்படை-2, வருமுருகாற்றுப்படை-3, பொருண்முருகாற்றுப்படை, பொருள் முருகாற்றுப்படை, இயல் முருகாற்றுப்படை, ஒரு முருகாற்றுப்படை, சேய் முருகாற்றுப்படை, வேல் முருகாற்றுப்படை போன்ற இருபத்தொரு சுவடிப்பதிப்பு நூல்கள் இவற்றில் இடம்பெற்றிருக்கின்றனவிலை ரூ.250/-.


இதழ்ப் பதிப்பு நூல்கள் (பகுதி 2)


ASIN  :  B0DGCX5HGY

இதழ்களில் வெளிவந்த கண்டி கதிர்காம வேலவன் மாலை, கதிர்காம வேலவன் தோத்திரம், குமரன் தாலாட்டு, திருப்பரங்கிரிக் குமரனூசல், பழனிமலை முருகன் மாதப் பதிகம், திருவிளையாடற் போற்றிக் கலிவெண்பா, திருவாலவாயுடையார் திருவிளையாடற் பயகரமாலை, கடம்பவன புராணம் -இலீலா சங்கிரகவத்தியாயம், திருவுசாத்தான நான்மணிமாலை, திருப்புகழ் - வெளிவராத இருபாடல்கள் ஆகிய பத்து இதழ்ப் பதிப்பு நூல்கள்  (பகுதி 2) இதில் இடம்பெற்றுள்ளனவிலை ரூ.150/-.


இரகுநாதத் தொண்டைமான் காதல்


ASIN  :  B0DKF4RSFL

புதுக்கோட்டைத் தொண்டைமான்களில் ஆறாவதா அமைந்த இராஜா இரகுநாதத் தொண்டைமான் பகதூர் கி.பி.1825 ஜூலை மாதம் 20ஆம் நாள் புதுக்கோட்டை மன்னராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு பகதூர் தன்னுடைய காதல் மனைவியைக் கரம்பிடித்த காதல் கதையை 353 கண்ணிகளில் பாடப்பெற்ற ஓலைச்சுவடியில் உள்ள ஓர் சிற்றிலக்கியம் இரகுநாதத் தொண்டைமான் காதல் ஆகும்விலை ரூ.100/-.


இலக்கிய இதழ்களும் நூல்களும்


ASIN  :  B0DFCT5DMZ

36 வகையான இலக்கியப் பருவ இதழ்கள் பற்றியும் அப்பருவ இதழ்களில் வெளிவந்த 408 சுவடிப்பதிப்புகள் பற்றியும் இந்நூல் எடுத்துரைக்கிறது. ஆதீனப் பருவ இதழ்கள், தனியார் பருவ இதழ்கள், அரசு நிறுவனப் பருவ இதழ்கள், தமிழ்ச்சங்கப் பருவ இதழ்கள், சுவடி நூலகப் பருவ இதழ்கள், பல்கலைக்கழக இதழ்கள் என்ற வகைப்பாட்டில் அமைந்த 36 வகையான பருவ இதழ்கள் பற்றி இந்நூல் விரிவாக எடுத்துரைக்கிறது. இப்பருவ இதழ்களில் வெளிவந்த சுவடிப் பதிப்புகளின் விவரம் அகர வரிசையில் தரப்பெற்றுள்ளதுவிலை ரூ.150/-.


உதயத்தூர் புலைமாடத்தி வரத்து



ASIN  :  B0DJDLX2PL

புலைமாடத்தி வரவழைத்த பேய்ப்படைகள் விசையாபதி குமாரர்கள் அரசோச்சிக் கொண்டிருந்த உதயத்தூர் நாட்டை புலைமாடத்தி வரவழைத்த பேய்ப்படைகள் எவ்வாறெல்லாம் பாழ்படுத்தின என்பதை எடுத்துரைக்கும் கதைப்பாடலே உதயத்தூர் புலைமாடத்தி வரத்து என்னும் இந்நூல்.  257 அகவலடிகளால் ஆன இந்நூல் ஓலைச்சுவடியிலிருந்து பதிப்பிக்கப் பெறுகிறதுவிலை ரூ.100/-.


ஊமைத்துரை சண்டை



ASIN  :  B0DJT6R24D

வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பியாகிய ஊமைத்துரை சிறையிலிருந்து மீண்ட பின்பு வீரபாண்டியன் ஊமைத்துரையின் சகோதரி முத்துநாச்சி சண்டை இட்டதன் பிறகு ஆங்கிலேயருடன் போரிட்ட ஓலைச்சுவடியில் உள்ள 367 அகவலடிகளால் ஆன கதையே ஊமைத்துரை சண்டை. விலை ரூ.100/-.


எரிச்ச நத்தம் முத்துமாரியம்மன் பேரில் முளைப்பாட்டு சந்தக்கும்மி

ASIN  :  B0F9NRCPC3

சிவகங்கை மாவட்டம் எரிச்ச நத்தம் என்னும் கிராமத்தில் கோயில் கொண்டிருக்கும் மாரியம்மனுக்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் சிறப்பான வழிபாடு நடத்தப்படுகிறது. இவ்வழிபாட்டில் பெண்கள் அம்மனுக்கு முளைப்பாரி எடுக்கின்றனர். இம்முளைப்பாரி எடுப்பதால் விளையும் பயன்கள் பற்றியும், மாரியம்மனின் சிறப்புக்கள் பற்றியும் 81 சந்தக் கும்மியால் பாடப்பெற்றது இந்நூல்.  விலை ரூ.50/-.


கடை மருந்து 64


ASIN  :  B0DHV9PLTF

கடைமருந்துகளான அக்கிரகாரம், அசமதாகம்(ஓமம்), அதிமதுரம், அதிவிடையம், அத்தித்திப்பிலி, அமுக்கராங்கிழங்கு,அசுவகந்தி, அரத்தை, ஆனைத்திப்பிலி, ஏலம், கடுகு, கடுகுரோகிணி, கடுக்காய், கடுக்காய் புளி, கண்டந்திப்பிலி, கந்தமஞ்சள், கருங்கொடிவேலி, கருஞ்சீரகம், கற்கடகசிங்கி, கஸ்தூரி மஞ்சள், காட்டுச்சதகுப்பை, கார்போகஅரிசி, கிச்சிலிக்கிழங்கு, கிராம்பு, குக்குலு, குங்கிலியம், குங்குமப்பூ, குந்திரிக்கம், கூகைநீர், கொத்தமல்லி, கோரோசினை, கோஷ்ட்டம், சடாமஞ்சி, சதகுப்பை, சந்தனம், சாதிக்காய், சாதிப்பத்திரி, சிறுதேக்கு, சிறுநாகப்பூ, சீரகம், சுக்கு, செஞ்சந்தனம், செவ்வியம், சேங்கொட்டை, தாளிசபத்திரி, தான்றிக்காய், திப்பிலி, திப்பிலிமூலம், திமிறுக்காய்வலம்புரிக்காய், நெல்லிக்காய், பாக்கு, பெருங்காயம், மஞ்சள், மஞ்சிட்டி, மரமஞ்சள், மிளகு, வசம்பு, வாய்விளங்கம், வாலுளுவை அரிசி, வெண்கடுகு, வெந்தயம் ஆகியவற்றின் மருத்துவக் குணங்கள் பற்றியும் போக்கும் நோய்கள் பற்றியும் எடுத்துரைப்பதாக ஓலைச்சுவடியில் உள்ள இந்நூல் பதிப்பிக்கப் பெறுகிறதுவிலை ரூ.100/-.


கன்னிக் குன்று


ASIN  :  B0DFFPTXNT

ஆசிரியரின் இளம் பருவத்தில் ஒரு நாள் காலை முதல் மறுநாள் காலை வரை தனக்கு ஏற்பட்ட பயண அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பெற்ற பயணக் கதையே கன்னிக் குன்று. அன்றைய நாளில் ஒரு இளைஞனிச் சிந்தனையை மையப்படுத்துவதாக இப்பயணக் கதை அமைந்துள்ளதுவிலை ரூ.60/-.


காதல் வாசல்


ASIN  :  B0DGGDV7TG

அமாவாசை, எத்தொழிலென்ன, காதல் வாசல், என் சுகாதாரம், சுகவனம், காதலி, குழந்தை, நாளொழுகு, முக்கண்ணன் எங்கே, நிலவு, நாடு நலம்பெற, நீயும் நானும், மறக்க முடியுமா, உயர்ந்த நிலவு, சுக வரிகள், கதலியாகுவாயே, ஏக்கத்திலே, நான், நாளெந்த நாளோ, தமிழ் மணம், இது உண்மை, கல்லூரிக்கு வரும் கடலலையே, மெய்ம்மை, பெரிபாடை, வாழும் காதல், துளிராத காதல், ஒத்தையடிப்பதையிலே, வீம்பானவள், ஓ… நிலவே, ஏராளம், மாற்றுவோம் கி.பி. கி.மு., கடல் நடுவே ஓர் கண்ணீர்த்துளி, அலைமகளே, மெல்ல வந்த தென்றல்மை விழியாளே, முடிவல்ல ஆரம்பம், என்னவள் காதலிக்கு, கலங்கரை விளக்கு, யாரைத் தேடுகிறாய், வண்ணக் கிளியை பகர்ந்திடுவோம் வாராயோ, தலைவன் முடிவு, ஆசையின்.., இதயமே ஒரு கோயிலை எழுப்பி வா, அடிக்காம்போ நான், என்ன கதி, என்னில் பார் போன்ற காதல் கவிதைகளின் தொகுப்பாகக் காதல் வாசல் என்னும் புதுக்கவிதை அமைந்துள்ளதுவிலை ரூ.100/-.


காதல் வீணை


ASIN  :  B0DGG9F5C9

காதல் வீணை, உயர்த்திவிட்டாயோ, என் உயிரே, காதலி, நீ இயற்றிய நான், நான் தானே விளக்கம், களையா நெஞ்சு, உன் பெயர், விலகாதே, நேசக்காரர்கள், பெண்கள், சொர்க்கம், சரியென்றால், உன் நினைவு, காதல் கடிதம், மலராத காதல், காதலிலே, என் அவள், சர்க்கரையே, வஞ்சி மகள், என் தவிப்பு, கட்டு எதற்கு, மல்லிகைப் பூ வாசம், இதோ காண், நிலவே நிலவே, கானல் நீர், நான் மட்டும் விதிவிலக்கா என்ன, நிலா, நிலவு, பெண், அடங்கிய கீதம், ஒருநிலைப்படுத்துவது, வேண்டும் உண்மை, பழமை, ரோஜா, அறிவிழந்தோம், நீயே நாடு, நான் நடத்தும் கலியாணம், காதல் தாகம், மச்சானைப் பாரடி போன்ற காதல் தொடர்பான கவிதைகள் கொண்டதாக காதல் வீணை என்னும் இந்நூல் அமைந்துள்ளது. விலை ரூ.100/-.


காலைக் கதிரழகு


ASIN  :  B0DFQK41N6

காலைக் கதிரழகு, பனித்துளி, மானம், மாட்சிமை யுடையார், தென்றலும் புயலாய் மாறும், இறம்பும் சிரிப்பும், உதவி வேண்டும், வந்த கடிதத்திற்கு, காதல் வடு, கண்மணி என் கண்மணி, வேதனை உலகம், ரோடு ரோலர், நாங்கள் பெற்ற சுதந்திரம், நேற்று பூத்த மலரிது, கடமை, நிலை நாட்டு, நாடு, சலவை மூளை, கசப்பு மருந்து, நிலமகள், தன்மானம்?, ஆளுமையின் விளிம்பு, வஞ்சிமகள், இளந்தளிர், புதையும் மகிழ்ச்சி, நெஞ்சிராதவள், பிள்ளை போற்றி, நல்நாவே, வாடாமலர், தமிழினம், கண்ணடிப்பு, நற்பயனை நாடு, இங்கிதங்கள், நான் இப்படி, இறைவன் இறங்கி வந்தால், நெஞ்சப் பிதுக்கல், காலைக் கதிரோன், அன்றும் இன்றும், தாகம், தோழி, கடமை, மன அலை, கோமான், தமிழ்த்தாய், உன்னதம், பனித்துளிகள், பவள நெஞ்சம், என்னில் வாழ் குமர குருபரா!, தீயாள் போன்ற 49 தலைப்புக்களில் அமைந்த கவிதைகளின் தொகுப்பாக காலைக் கதிரழகு அமைந்துள்ளது. விலை ரூ.100/-.


கோவை மனம்


ASIN  :  B0DFTWWF6J

என்னுடைய வாழ்க்கையில் நான் அனுபவித்த, உணர்ந்த, சிந்தித்த எண்ணங்களின் சமுதாய மேம்பாட்டுச் சிந்தனைகளின் வெளிப்பாடாக கோவை மனம் (001-800) அமைந்திருக்கிறது. நாள் தோறும் வலையொளியிலும் முக நூலிலும் புலனத்திலும் வெளிவந்த இவை இப்போது இங்கு வெளியிடப்பெறுகிறது. விலை ரூ.100/-.


கோவைக் களஞ்சியம்


ASIN  :  B0DLB23RV9

என்னுடைய எழுத்தூசி புலனத்திலும் முகநூலிலும் நாள்தோறும் வெளியிட்ட கோவைச் சூடி (250), கோவை ஊற்று (250), கோவைக் குறள் (100), கோவை வெண்பா (50) ஆகிய படைப்புக்களின் தொகுப்பாக கோவைக் களஞ்சியம் அமைந்துள்ளது. விலை ரூ.100/-.


கோவைச் சுவடுகள் (பகுதி 1)


ASIN  :  B0DFYRXCHK

அப்பர் பாடல்களில் எழுத்துப்போலிகள், இடுக்கண் வருங்கால் நகுக, இதழாளர் அண்ணா, இலக்கியத்திலும் சிற்பத்திலும் நீலகண்டர், இறையனார் அகப்பொருளும், கம்பராமாயண அகமரபும், ஐக்கூக்கவிதை - ஓர் ஆய்வு, ஓரெழுத்தோர்மொழி அகராதி ஆகிய எட்டுக் கட்டுரைகளின் தொகுப்பாக கோவைச் சுவடுகள் பகுதி 1 அமைந்துள்ளதுவிலை ரூ.100/-.


கோவைச் சுவடுகள் (பகுதி 2)


ASIN  :  B0DFYZR84P

கம்பனில் சூழ்ச்சிப் பந்தல், கவிஞர்கள் பார்வையில் எம்.ஜி.ஆர், கொலை களவு காமம் - சங்க மரபும் திருக்குறள் மறுப்பும், கோயில் வழிபாட்டு நெறிமுறைகள், சங்க இலக்கியத்தில் விலங்குகள், சங்க இலக்கியம்- திருமுறை உணர்த்தும் குடந்தை, சங்க கால நடுகல் நம்பிக்கையும் வழிபாடும், சப்தமாதர் வடிவங்கள், சமயக் குரவர்களின் சமூகச் சிந்தனை, சித்தார்த்த 'சே' குவேரா சிறுகதைகளின் உள்ளடக்கம், சிலப்பதிகாரத்தில் நாட்டுக் கூறுகள், சிலம்புகழி நோன்பு ஆகிய பன்னிரண்டு கட்டுரைகளின் தொகுப்பாக கோவைச் சுவடுகள் பகுதி 2 அமைந்துள்ளதுவிலை ரூ.100/-.

 

கோவைச் சுவடுகள் (பகுதி 3)


ASIN  :  B0DG2V926P

சுந்தரர் சொற்றமிழில் “முருகாளுமை”, இந்துக் கடவுளர்களின் ஊர்தியும் கொடியும், தமிழில் அறிவியல் புனைகதை - ஒரு பார்வை, தமிழிலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள், தமிழ் வளர்ச்சியில் நூலிதழ்கள், திருமந்திரத்தில் பிறப்பியல், திருவள்ளுவர் கூறும் குற்றங்கள், திருவாசகத்தில் மாதொரு பங்கன் ஆகிய எட்டுக் கட்டுரைகளின் தொகுப்பாக கோவைச் சுவடுகள் பகுதி 3 அமைந்துள்ளதுவிலை ரூ.100/-.


கோவைச் சுவடுகள் (பகுதி 4)


ASIN  :  B0DG2WS9DF

நாயன்மார்களின் செயல்கள் - கொலையா? அறமா?, தீர்த்தப் பண்பாடு, தொல்காப்பியத்தில் மும்மை, நால்வர் பார்வையில் பாவேந்தர், பட்டினப்பாலையில் திணைமயக்கம் காட்டும் வாழ்வியல் நெறி, பதினோராம் திருமுறையில் யாப்பு, பாவேந்தர் பாடல்களில் பாவும் பாவினமும், மகரிஷியின் வாழ்வியல் சிந்தனைகள், மரபும் மறுப்பும், மாதாந்திர அமுதத்தில் சிந்தனைத் துளிகள், வள்ளுவச் சிலம்பு ஆகிய பதினொரு கட்டுரைகளின் தொகுப்பாக கோவைச் சுவடுகள் பகுதி 4 அமைந்துள்ளதுவிலை ரூ.100/-.


கோவைச் சுவடுகள் (பகுதி 5)


ASIN  :  B0DGCSY98S

தமிழ் மென்பொருள்களின் தேவை, சரஸ்வதிமகால் நூலக இலக்கியச் சுவடிகள், தமிழ்மாமுனிவர் ஆசிரியர் மங்கலங்கிழார், பழந்தமிழரின் கலன்கள், பழந்தமிழரின் நீர்வழி வாணிகம், பழந்தமிழர் பாடல்களில் ஞாயிறும் திங்களும், பழந்தமிழிலக்கியத்தில் நெருப்பியல், பழந்தமிழ் இலக்கியங்களில் கடலியல், பழந்தமிழர் இலக்கியங்களில் நெசவும் ஆடையும், தமிழில் திரட்டும் தொகுப்பும் ஆகிய பத்துக் கட்டுரைகளின் தொகுப்பாக கோவைச் சுவடுகள் பகுதி 5 அமைந்துள்ளதுவிலை ரூ.100/-.


கோவைச் சுவடுகள் (பகுதி 6)

ASIN  :  B0DKDYVFFK

கரந்தைச் செப்பேட்டில் ஆட்சியமைப்பு, பழந்தமிழ் இலக்கியங்களில் கப்பல், பன்னிரு பாட்டியல் மூலமும் உரையும், முக்கூடற்பள்ளு மூலமும் உரையும், சோழர் மெய்க்கீர்த்திகள், சீவேந்திரர் சரிதம், குமரகுருபரரின் நூல்கள் ஆகிய ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பாக கோவைச் சுவடுகள் பகுதிஎன்னும் இந்நூல் அமைந்துள்ளதுவிலை ரூ.100/-.


கோவைத் தூறல் (சிறுகதைத் தொகுப்பு 1)


ASIN  :  B0DF5FYPJC

இப்ப என்ன உறவு, இரு உள்ளங்கள், உறவும் உள்ளமும், காலம் இப்படி, சென்றதோர் கற்றதோர், துண்டுக் கடிதம், துன்பத்தின் எல்லை, முத்தின காய், யார் தவறு, சிதறல்கள் ஆகிய பத்துச் சிறுகதைகளின் தொகுப்பாக கோவைத் தூறல் (சிறுகதைத் தொகுப்பு 1) என்னும் நூல் அமைந்துள்ளது. விலை ரூ.100/-.


கோவைமணி



ASIN  :  B0DGLPYRQ8

கோவைமணியின் அறுபதாண்டுக் கால வாழ்க்கையில் நடைபெற்ற கி.பி.2024 வரை நடந்த நிகழ்வுகளின் தன்விளக்க நூலாக கோவைமணி அமைந்துள்ளதுவிலை ரூ.100/-.


சித்த மருத்துவத்தில் நாடி

ASIN  :  B0DF54Q2RN

“சித்த மருத்துவத்தில் நாடி’’ எனும் நூல் பதிப்பில் உடற்செயற்பாட்டில் மனிதனுக்கு அடிப்படைத் தேவையான சுவாசம், சுவாசத்தின் மூலம் உடலின் தன்மைகளை அறியவுதவும் நாடிகள், நாடிகளின் வகைகள், முக்கியமான பத்து நாடிள், அவற்றின் இருப்பிடம், நாடி என்பது ஒன்றுதான், நாடியை எப்படிப் பார்க்க வேண்டும், நாடிகளின் நடை (வாத, பித்த, சிலேத்தும, பூத, குரு), நாடிகளின் பொதுத் தன்மைகள், குறிப்பிட்ட நாடிகளுக்கேயுடைய குணம், நாடிகளின் மாத்திரை அளவு, கால நிலையால் நாடிகளைக் காணுதல், வயதால் நாடியின் நிலை, உறுப்புகளின் நிறத்தால் நோயறிதல், நாடிகள் நாள்தோறும் சிறப்புறுங் காலம், தொந்த நாடிகள், அவற்றின் பொதுவியல்பு, நாடி தெரியாததற்குக் காரணம், நோய் தோன்றுவதற்கான காரணங்கள், நோயின் வகைகள், நோய் உள்ளவர்க்கான அறிகுறிகள், உண்ணும் உணவில் எற்படும் மாறுதல்கள், நீண்ட நாள் வாழ்வதற்கான அறிகுறிகள், மரணக் குறிகள், பிற செய்திகள் தொடர்பாகவும் பல்வேறு நாடி தொடர்பான ஓலைச்சுவடிகளில் உள்ள 296 பாடல்களின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது. விலை ரூ.200/-.


சிறுத்தொண்டன் கதை

ASIN  :  B0DJF5T5HG

திருத்தொண்டர் புராணம் என்று சொல்லக் கூடிய பெரிய புராணத்தில் இடம்பெற்றிருக்கக் கூடிய சிறுத்தொண்ட நாயனாரின் கதையினை வில்லுப்பாட்டு வடிவத்தில் நாட்டுப்புறக் கதைப்பாடலாக அமைந்ததே இந்நூல்.  ஓலைச்சுவடியிலிருந்து இந்நூல் பதிப்பிக்கப் பெறுகிறதுவிலை ரூ.100/-.


சின்னத்தம்பி கதை

ASIN  :  B0DJF814JP

வேப்பலாங்குளம் சிற்றூரில் வாழ்ந்த சக்கிலியப்படைச் சாதியைச் சேர்ந்த இராமப்பகடைக்கும் அவன் மனைவி பூலுடையாளுக்கும் பிறந்த சின்னத்தம்பியின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைப்பதாக 706 அகவலடிகளால் இந்நூல் அமைந்துள்ளது. சின்னத்தம்பியின் வாரிசுகள் இன்னும் வாழ்ந்துக் கொண்டிருப்பதை ஆய்வாளரால் அறியப்படுகிறதுஇந்நூல் ஓலைச்சுவடியில் இருந்து பதிப்பிக்கப்படுகிறதுவிலை ரூ.100/-.


சுவடிநூல் ஆய்வுகள்

ASIN  :  B0DFWRLWMF

கந்தன் கடாட்ச சதகம், சாத்துக்கவிகளில் பக்தமான்மியம், தஞ்சைப் பெரியதாசர்நாவான் சாத்திரம், திருக்குறள் மணக்குடவர் உரை, முத்தொள்ளாயிர விளக்கம், மெய்க்கீர்த்திகள், மோடி ஆவணம், விருக்ஷாதி ஸம்ரக்ஷ்ண சாஸ்திர தீபிகை ஆகிய ஒன்பது சுவடிப் பதிப்பு நூல்களின் ஆய்வுகள் குறித்ததாக சுவடிநூல் ஆய்வுகள் என்னும் இந்நூல் அமைந்துள்ளது. விலை ரூ.100/-.


சுவடியியல் ஆய்வுகள் (பகுதி 1)

ASIN  :  B0D4YZZX5G

சுவடியியல் தொடர்பான ஆய்வுகளாக அச்சுக்குப்பின் எழுந்த சுவடிகள், உ.வே.சா.வின் பதிப்புலக அறிமுகம், இதழ்களில் மருத்துவச் சுவடிப்பதிப்புகள், திருமுருகாற்றுப்படைப் பதிப்புகள், துறைமங்கலம் சிவப்பிரகாசர் நூல்களின் பதிப்புகள், ஓலைச்சுவடிகளில் ஊர்ப்பெயர்கள் போன்ற ஆறு கட்டுரைகளின் தொகுப்பாக சுவடியியல் ஆய்வுகள் பகுதி 1 அமைந்துள்ளதுவிலை ரூ.100/-.


சுவடியியல் ஆய்வுகள் (பகுதி 2)

ASIN  :  B0DFYRL17Q

சுவடி நூல்கள் பற்றிய ஆய்வாக கந்தசாமி சுவாமிகளின் நூற்பதிப்புகள், சம்பந்தரைப் போற்றும் நூல்கள், தொல்காப்பியப் பொருளதிகாரப் பதிப்புகள், தமிழ்ப் பல்கலைக்கழகச் சுவடிப்பதிப்புகள், அட்டவணைப்படுத்துவதில் ஏற்படும் சிக்கல்கள், சுவடிகளை மாற்றுருவாக்குவதில் ஏற்படும் சிக்கல்களும் தீர்வுகளும், சுவடி திரட்டில் களப்பணி அனுபவங்கள், சுவடிகளில் பிழைகள் போன்ற எட்டுக் கட்டுரைகளின் தொகுப்பாக சுவடியியல் ஆய்வுகள் பகுதி 2 அமைந்துள்ளது. விலை ரூ.150/-.


சுவடியும் நானும்

ASIN  :  B0DHKR6G3G

தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித் துறையில் 18.09.1989இல் நான் பணியில் சேர்ந்தது முதல் 21.07.2023இல் பணி ஓய்வு பெற்றது வரை ஓலைச்சுவடி நூலகத்தின் முன்னேற்றத்திற்கு ஓலைச்சுவடி நூலகத்திற்கு நான் செய்த பணிகள் குறித்தும், சுவடிகள் சேகரித்தது குறித்தும் (கால நிரல்படி), சுவடி சேகரிப்பில் ஏற்பட்ட அனுபவங்கள் குறித்தும் தெளிவாக எடுத்துரைப்பதாக சுவடியும் நானும் என்னும் இந்நூல் அமைந்துள்ளது. விலை ரூ.200/-.


செம்புலப் பெயல்நீர் (ஐக்கூக் கவிதை)

ASIN  :  B0DF6BGHKK

ஐக்கூக் கவிதைகளின் தொகுப்பாக செம்புலப்பெயர் நீர் அமைந்துள்ளது. கல்லூரிக் காலத்தில் ஐக்கூக் கவிதையில் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கு ஓவியக் கவிஞர் அமுதபாரதியின் ஐக்கூக் கவிதைகளை ஆய்வு செய்யத் தொடங்கி, ஐக்கூக் கவிஞனாகி, கவிதா மண்டலம் போன்ற பல இதழ்களில் வெளிவந்துள்ள 701 ஐக்கூக் கவிதைகளின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது. இதற்கு முன் ஐக்கூ ஐநூறு என்ற நூல் 1999இல் வெளிவந்தது. அந்நூல் முற்றும் தீர்ந்துவிட்ட படியால் அக்கவிதைகளுடன் மேலும் 200 கவிதைகளைச் சேர்த்து என்மகள் மோ.கோ. பாரதியின் திருமண வரவேற்பில் வழங்கும் பொருட்டு செம்புலப்பெயர் நீர் 2013இல் வெளியிடப்பெற்றது. அந்நூல் படிகளும் தீர்ந்துவிட்டபடியால் இந்நூலின் மின்பதிப்பாக இப்பொழுது வெளிவருகிறது. எதார்த்தமான பல கருத்தமைவுகளுடன் ஐக்கூவின் யாப்பு 5-7-5 என்ற அமைப்பின் அடிப்படையில் இந்நூல் அமைந்துள்ளதுவிலை ரூ.125/-.


தமிழில் கதைப்பாடல் சுவடிகள் (தொகுதி 1)

ASIN  :  B0DF34SVJB

ஓலைச்சுவடிகளில் காலங்காலமாக எழுதப்பட்ட கதைப் பாடல்கள் இன்னும் பல அச்சேற்றம் காணாமல் இருக்கின்றன. அவற்றைப் பற்றிய செய்திகள் கூட இன்னும் தெரியாமல் இருக்கின்றன. இந்நிலையில் ஓலைச்சுவடிகளில் இருக்கக் கூடிய அனைத்து கதைப்பாடல்கள் பற்றி எடுத்துரைக்க வேண்டுவதும் அவற்றைப் பதிப்பிப்பதும் இன்றைய தேவையாகிறது. இந்நிலையில் ஓலைச்சுவடியில் இருக்கக் கூடிய ஆறு கதைப்பாடல்கள் பற்றிய அறிமுகமாக இந்நூல் அமைந்திருக்கிறது.  உதயத்தூர் புலைமாடத்தி வரத்து, சிறுத்தொண்டன் கதை, சின்னதம்பி கதை, தேவமாதா அம்மானை, முத்துநாச்சி சண்டை வல்லான் காவியம் ஆகிய ஆறு கதைப்பாடல்கள் பற்றி இந்த முதல் தொகுதியில் ஆராயப்பட்டுள்ளது. விலை ரூ.175/-.


தமிழில் கதைப்பாடல் சுவடிகள் (தொகுதி 2)

ASIN  :  B0DFD2LQGS

ஓலைச்சுவடிகளில் காலங்காலமாக எழுதப்பட்ட கதைப் பாடல்கள் இன்னும் பல அச்சேற்றம் காணாமல் இருக்கின்றன. அவற்றைப் பற்றிய செய்திகள் கூட இன்னும் தெரியாமல் இருக்கின்றன. இந்நிலையில் ஓலைச்சுவடிகளில் இருக்கக் கூடிய அனைத்து கதைப்பாடல்கள் பற்றி எடுத்துரைக்க வேண்டுவதும் அவற்றைப் பதிப்பிப்பதும் இன்றைய தேவையாகிறது. இந்நிலையில் ஓலைச்சுவடியில் இருக்கக் கூடிய ஆறு கதைப்பாடல்கள் பற்றிய அறிமுகமாக இந்நூல் அமைந்திருக்கிறது. முத்துமாலையம்மன் கதை, நாச்சியாரம்மன் கதை ஆகிய இரண்டு கதைப்பாடல்கள் பற்றியும், அக்கதைப்பாடல்களில் காணப்படக்கூடிய சிறப்புக் கூறுகள் மற்றும் தன்மைகள் பற்றியும் தமிழில் கதைப்பாடல் சுவடிகள் என்னும் இந்த இரண்டாவது தொகுதி எடுத்துரைக்கிறது. விலை ரூ.150/-.


தமிழ்ப் பல்கலைக்கழகச் சுவடிகள் 


ASIN  :  B0DJPFXDH1

தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித்துறையில் பாதுகாக்கப்பெற்று வரும் முதல் 5000 ஓலைச்சுவடி நூல்களுக்கான விவரம் கொண்டதாக இந்நூல் அமைந்துள்ளது. விலை ரூ.250/-.


திருக்குருகூர்த் திருப்பணிமாலை

ASIN  :  B0DHYXZB4T

குருகூர் என்று சொல்லக்கூடிய ஆழ்வார் திருநகரியில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் செய்யப் பெற்ற திருப்பணிகளைப் பற்றி 118 பாடல்களில் எடுத்துரைப்பதாக திருக்குருகூர்த் திருப்பணிமாலை அமைந்துள்ளது. இத்திருக்குருகூர்த் திருப்பணிமாலை மதுரை, தமிழ்ச்சங்க வெளியீடான செந்தமிழ் இதழில் 1949 - 1950ஆம் ஆண்டு வரை வெளிவந்துள்ளது. இதன் ஆய்வுப் பதிப்பாக இப்பொழுது வெளிவருகிறதுவிலை ரூ.100/-.


திருச்செந்திற் சந்த விருத்தம்

ASIN  :  B0F8BWCFX6

தொட்டிக்கலை சுப்பிரமணி முனிவர் பாடிய முப்பது நூல்களில் இதுவரை பதினாறு நூல்கள் மட்டும் கிடைக்கின்ற நிலையில் ஏனையே பதினான்கு நூல்கள் கிடைக்கவில்லை. அதனுடைய மூலப் பிரிதிகளும் கிடைக்கவில்லை. அவர் இயற்றிய நூல்களின் பெயர்களின் பெயர்கள் மட்டும் அறிய முடிந்த நிலையில் திருச்செந்திற் சந்த விருத்தம் என்னும் நூல் திருவாவடுதுறை ஆதீனம் மூலம் 1854இல் வெளிவந்தும் கிடைக்காத ஒன்றாகவே இருக்கிறது. அப்பதிப்பும் சுவடி எழுத்தமைபினை ஒட்டியே சீர் பிரிக்காமல், அடி பிரிக்காமல், யாப்பு வடிவம் இல்லாமல் சுவடியில் உள்ளது போலவே அமைந்திருக்கிறது. எனவே, இங்கு யாப்புநிலை உருவாக்கிப் பதிப்பிக்கப்பெற்றிருக்கிறது. திருச்செந்தூர் முருகன் மீது அவனது பெருமைகளையும் சிறப்புக்களையும் எடுத்துரைப்பதாக அமைந்துள்ள இந்நூல் பல்வேறு சந்த விருத்த யாப்பில் 100 பாடல்களால் பாடப்பெற்றுள்ளது.  விலை ரூ.100/-.


தேவமாதா அம்மானை

ASIN  :  B0DK4F32FP

அன்னை மாதாவின் பிறப்பு முதல் பதினைந்து காரணங்கள் வரை அன்னை மாதாவின் வரலாற்றினை அம்மானை நடையில் எடுத்துரைப்பதே தேவமாதா அம்மானை கதைப்பாடலாகும். இதனை மாதா அம்மானை என்றும் வழங்குவர். 3249 அம்மானை வரிகளால் ஆனது.  1876ஆம் ஆண்டு இந்நூல் மாதா அம்மானை என்ற பெயரில் வெளிவந்தது இப்போது ஓலைச்சுவடிப் பதிப்பாக வெளிவருகிறதுவிலை ரூ.200/-.


தேன் தமிழ்

ASIN  :  B0DGGD4S4C

தமிழ், தேன் தமிழ், கனவுவந்திடுவாய் மாமழையே, எதற்கு இந்தப் பாதி, ஏழு கலை, என் சித்திரம், மனமொரு குரங்கு, மனைவி, உழவன், படிதாண்டிய பத்தினி, தமிழ் வாசம், நான் யார், பெருக வேண்டும் வேலை, புரட்சிப் பயணம், பாவம் பாரதி, புத்தொழில் கற்றிடுக, நாங்கள் பட்ட தொல்லை, புத்துணர்வு, நானொரு பித்தன், பட்டமோ பட்டம், இந்த நாட்டின், நிலவே நிலவே, கஷ்டங்கள், குயிலே நீ பாடு, ஊர்வலங்கள், அழுகைகள், எங்கும் காவல், கண்ணீர், மரமே உனக்கு உல்லாசம், பெருமழையே உன்னைத்தான், வறுமை, நினைவுகள், பெண்கள், பொறுமை, ஏக்கங்கள் தாக்கல் செய்யப்படுகின்றன, பாசக் கயிறு, வளரும் சமுதாயம், வானமே, உருவாகின்றாள் புதுமைப்பெண், கவிஞனின் காதல், கவிபாடும் உள்ளம், மாற்ற முடியாது, கவிதை ஒரு தீவு அல்ல, கவிதை, நான் எழுதிய பாட்டு, வற்றாத வறுமை, சூரியனைச் சுட்டெரிக்கும் சுடர் விளக்குகள் போன்ற காதல் கவிதைகள், சமுதாயக் கவிதைகள் எனப் பல்வேறு விதமான கவிதைகளின் தொகுப்பாகத் தேன் தமிழ் கவிதைத் தொகுப்பு அமைந்துள்ளது. விலை ரூ.100/-.


தொண்டில்மண் வழக்காறுகள்

ASIN  :  B0DFWT5RZY

இந்நூலாசிரியர் பிறந்து வளர்ந்த பொதட்டூர்ப்பேட்டையில் வழக்கத்தில் இருந்து மறைந்த மற்றும் சில இருக்கும் வழக்காறுகள் பற்றி எடுத்துரைக்கும் நூலாகத் தொட்டில்மண் வழக்காறுகள் அமைந்துள்ளது. இதில், பொதட்டூர்பேட்டையில் பொங்கல் திருவிழா, தறி புகு விழா (கைத்தறி மற்றும் விசைத்தறி), 'பிடியரிசி', சிறுவர்-சிறுமியர் விளையாட்டுகள், மடத்துத் தெய்வங்கள், கைத்தறி நெசவுத்தொழில் வழிபாடும் கலைச்சொற்களும் என்னும் ஆறு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. விலை ரூ.65/-.


நாவான் சாத்திரம்

ASIN  :  B0DJY4FZXQ

பழந்தமிழரின் கடல்வழி வாணிபத்திற்கும் போக்குவரத்திற்கும் இருபத்து மூன்று வகையான சிறிய மற்றும் பெரிய கலன்கள் (கப்பல்கள்) பயன்பட்டுள்ளன. அவை கட்டுவதற்கான நெறிமுறைகள் அடங்கியதாக நாவான் சாத்திரம் என்னும் சுவடி அமைந்துள்ளது. அச்சுவடியை வெளிப்படுத்தும் முகத்தான் இப்பதிப்பு வெளிப்படுகிறது.  நாவாய் சாத்திரம் என்னும் நூலிலிருந்து வேறுபட்டதுவிலை ரூ.100/-.


பதிப்புலகத் தூண்கள்

ASIN  :  B0DF2BHJ9K

ஓலைச்சுவடிகளில் உள்ள பல்வேறு வகைப்பட்ட தமிழ் நூல்களைப் பெயர்த்தெழுதி காகிதத்தில் அச்சிட்டவர்களைப் பழந்தமிழ் நூல் பதிப்பாளர்கள் என்கின்றோம். அவர்களில் யாழ்ப்பாணம் நல்லூர் ஆறுமுக நாவலர், ந.மு. வேங்கடசாமி நாட்டார், எஸ். வையாபுரிப் பிள்ளை, ஔவை சு. துரைசாமி பிள்ளை, இரா. இராகவையங்கார், மு. இராகவையங்கார் ஆகியோரைப் பற்றியும் அவர்கள் பதிப்பில் நிகழ்த்திய திறன்கள் குறித்தும் இந்நூல் விளக்குகிறது. விலை ரூ.300/-.


பருவ இதழ்ச் சுவடிப்பதிப்புகள்

ASIN  :  B0DJMR7H62

கி.பி1897 முதல் 2000 வரை வெளிவந்த 36 வகையான இலக்கியப் பருவ இதழ்களில் வெளிவந்த 408 சுவடிப் பதிப்புகள் பற்றி அகர நிரலில் இந்நூல் எடுத்தியம்புகின்றது. விலை ரூ.300/-.


பல்லவராயன் உலா

ASIN  :  B0DJF63K8W

மல்லை சிவந்தெழுந்த பல்லவராயர் பேரில் பாடப்பெற்ற உலாவின் பாட்டுடைத் தலைவனான சிவந்தெழுந்த பல்லவராயன் கூடலர் கோன் என்பது கூடல் என்னும் ஊர்த் தலைவன் ஆவான். மல்லை, சிவந்தெழுந்த பல்லவராயன் எனக் குறிப்பதால் மல்லையூர் என்பது செங்கற்பட்டுக்கு இருபது மைல் தூரத்தில் உள்ள கடற்கரைச் சாலையில் உள்ள மகாபலிபுரம் ஆகும்.  இவ்வுலாவின் தலைவன் பெயர் சேமன் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. பெரிய பெருமாள் எனப் பெயர் பெற்ற இவன் தந்தை திருக்கோகர்ணத்து சுவாமியை வேண்டிப் பிறந்த குழந்தை சிவந்தெழுந்த பல்லவராயன் ஆவான். இந்நூலில் பல்லவராயரின் சிறப்புக்கள் பல எடுத்தியம்பப் பெற்றுள்ளன. 622 கண்ணிகளால் ஆனதுவிலை ரூ.100/-.


பன்முக நோக்கில் விக்கிரமாதித்தன்

  • ASIN ‏ : ‎ B0F5NK8KQL
  • இரண்டாயிரம் ஆண்டுகள் விக்கிரமாதித்தன் அமர்ந்து அரசாட்சி செய்த சிம்மாசனத்தில் போசராசா அமர்ந்து அரசாட்சி செய்ய சிம்மாசனம் ஏறுவதற்குத் தேவையான நீதிகளையும் தான தர்மங்களையும் முப்பத்திரண்டு பதுமைகள் எடுத்துரைக்கும் கதைகளில் வேறுபாடுகளும் மொழிநடை வேறுபாட்டுடன் ஒற்றுமைகளும் இருப்பதை எடுத்துரைப்பதாக இந்நூல் அமைந்துள்ளது. விலை ரூ.100/-.


பன்முக நோக்கில் வேதாளம்

  • ASIN ‏ : ‎ B0F3FFZPXG
  • விக்கிரமாதித்தனிடம் வேதாளம் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் புத்திமானாகிய விக்கிரமாதித்தன் பதில் உரைக்க, வேதாளம் விக்கிரமாதித்தனுடன் வர மறுத்து மீண்டும் மரத்தில் ஏறிக் கொள்கிறேது. இருபத்து ஐந்தாவது கதைக்கு விக்கிரமாதித்தன் உரிய பதிலைச் சொல்லாததால் வேதாளம் வெற்றி பெற்று, விக்கிரமாதித்தனுடன் வந்தது. இக்கதைகள் பல்வேறு ஓலைச்சுவடிகளிலும், பதிப்புகளிலும் ஒன்றுபட்டும் வேறுபட்டும் அமைந்திருப்பதை இந்நூல் எடுத்துரைக்கிறது. விலை ரூ.75/-.

பன்னிரு பாட்டியல் மூலமும் உரையும்


  • ASIN ‏ : ‎ B0DXF3JVJ1

பாட்டியல் நூல்களில் குறிப்பிடத்தக்கது பன்னிரு பாட்டியல். இதில் எழுத்தியல், சொல்லியல் என்ற இரு பகுதிகள் அமைந்துள்ளன. சொல்லியலில் உள்ள பாவினத்தில் 61 சிற்றிலக்கியங்களுக்கான இலக்கணம் கூறப்பெற்றுள்ளது. குறிப்பா, சாதகம், பிள்ளைத்தமிழ், வேந்தன் குடைமங்கலம், ஒருபோகு, கலம்பகம், உலா, சின்னப்பூ, பரணி, மடல், மறம், பல்சந்த மாலை, இணைமணிமாலை, இரட்டைமணிமாலை, மும்மணிமாலை, நான்மணிமாலை, கலம்பக மாலை, மும்மணிக்கோவை, கலி அந்தாதி, ஒலி அந்தாதி, யானைத்தொழில், வருக்கமாலை, நாமமாலை (புகழ்ச்சிமாலை), இன்னிசைத் தொகை, விருத்த வகை, ஐம்படை விருத்தம், நாழிகைக் கவி, நவமணிமாலை, கைக்கிளைமாலை, அரி பிறப்பு, அட்டமங்கலம், இல்லற வெள்ளை, மங்கல வெள்ளை, தாரகை மாலை, செந்தமிழ் மாலை, தாண்டகம், பதிகம், மறக்களவஞ்சி, செருக்களவஞ்சி, செருக்களவழி, சீர்மெய்க்கீர்த்தி, ஆற்றுப்படை, கண்படை நிலை, துயிலெடை நிலை, விளக்கு நிலை, கடா நிலை, யாண்டு நிலை, பறை நிலை, அந்தாதித் தொகை, மருட்பா, பாதாதி, பணைமுலை நயனம், உழத்திப்பாட்டு, குறத்திப் பாட்டு, ஓருபா ஒருபஃது, இருபா இருபஃது, கோவை, கணக்கு, தொடர்நிலைச் செய்யுள், பாட்டு (பத்துப்பாட்டு), கடைநிலை, கையறு நிலை போன்றவற்றிற்கான இலக்கணம் கூறப்பெற்றுள்ளது. விலை ரூ.100/-.


புதிய மனிதன் (குறுநாவல்)

ASIN  :  B0DFGQT5JS

மனமொத்த இரண்டு உள்ளங்கள் பல போராட்டங்களுக்கு இடையில் இணையும் காதல் கதையே புனிய மனிதன். உறவாக இருந்தாலும் மனம் வேறுபட்டால் உறவாடாத நிலையினையும், அந்த உறவில் இரத்தத்தால் உறவு இணைக்கும் போது ஏற்படும் மனவேறுபாட்டு நிலையினையும் இக்குறுநாவல் எடுத்தியம்புகிறதுவிலை ரூ.60/-.


புறநானூறு உணர்த்தும் வாகைத்திணை

ASIN  :  B0DF2K22ND

புறநானூற்றில் வாகைத்திணைக்கு உரியனவாக 83 பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. இவ்வெண்பத்து மூன்று பாடல்களில் அரசவாகை, ஏறாண் முல்லை, சால்பு முல்லை, தாபத வாகை, பார்ப்பன முல்லை, பார்ப்பன வாகை, மறக்களவழி, மறக்களவேள்வி, மூதின் முல்லை, வல்லாண் முல்லை ஆகிய பத்துத் துறைகள் இடம்பெற்று இருக்கின்றன. இவற்றைப் பற்றி உரிய சான்றுகளுடன் வாகைத்திணை குறித்துத் தெளிவாக எடுத்துரைக்கிறது. விலை ரூ.100/-.


பூட்டாதிருக்கும் வாசல் (கவிதைக்கதை)

ASIN  :  B0DF598V9T

இது ஒரு காதல் கதை. ஆசிரியப்பா நடையில் 726 வரிகளில் அமைந்தது. உன்னதமாகத் தொடங்கிய காதல் தகாத உணர்வுகளின் வெளிப்பாடாக காதல் பிளவு ஏற்பட்டதை எடுத்துரைப்பதாக அமைந்த கதை. அதாவது முன்னுரை எழுதுவதற்கு முன்னரே முடிவுரை எழுதிய காதல் கதையாக இக்கவிதைக் கதை அமைந்துள்ளதுவிலை ரூ.100/-.


பொன்வண்ணத்தந்தாதி மூலமும் பல்நோக்குரையும்

  • ASIN ‏ : ‎ B0F84T1DF7

ஓலைச்சுவடிகளை ஒப்புநோக்கி பாடவேறுபாடுகளுடன் சேரமான் பெருமாள் நாயனார் இயற்றிய பொன்வண்ணத்தாதி என்னும் நூல் பல்நோக்கு உரைகளுடன் (அருஞ்சொற்பொருள், சுருக்கப் பொருள், பதவுரை, பொழிப்புரை, தெளிவுரை, குறிப்புரை, இலக்கணக் குறிப்பு) என்ற முறையில் இதுவரை வெளிவந்த நூல்களையும் இதுநாள் வரை கிடைத்த பதினொரு ஓலைச்சுவடிகளையும் ஒப்பீடு செய்து சிறந்த சுவடிப்பதிப்பாக இந்நூல் வெளியிடப்பெற்றிருக்கிறது. விலை ரூ.300/-.


மீனாட்சியம்மன் பிள்ளைத்தமிழ்      

மூலமும் உரையும்


ASIN: B0DQ25T51Q
மதுரையில் கொலுவீற்றிருக்கும் மீனாட்சியம்மன் மீது குமரகுருபரர் பாடிய பிள்ளைத்தமிழ் நூலே மீனாட்சியம்மன் பிள்ளைத்தமிழ்.  ஏற்கெனவே பல பதிப்புகள் வெளிவந்திருந்தாலும் அண்மையில் கிடைக்கக் கூடிய ஓலைச்சுவடிகளோடு ஒப்பீடு செய்து எளிய பாடற் கருத்துடன் இந்நூல் இங்குப் பதிப்பிக்கப்பெற்றிருக்கிறது.  இதன் விலை ரூ.250/-.


முக்கூடற்பள்ளு மூலமும் உரையும்
ASIN  :  B0FCD1M8XV

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலில் பள்ளன் - மூத்தபள்ளி-இளையபள்ளி ஆகியோரின் வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்வுகளையும், மூத்தபள்ளியை விடுத்து இளையபள்ளியிடம் தஞ்சமடைந்த பள்ளனைப் பற்றி மூத்தபள்ளி பண்ணைக்காரனிடம் முறையிடுவதும், பள்ளனை முன்னிறுத்தி மூத்த பள்ளியும் இளையபள்ளியும் ஏசிக் கொள்வதும் பின்னர் சமாதானமடைந்து இணைந்து ஒன்றாக பள்ளளிடம் வாழ்வதையும் எடுத்துரைப்பதாக அமைந்துள்ளதே முக்கூடற்பள்ளு என்னும் நூல். இந்நூலில் ஆசிரியர் பெயர் தெரியவில்லை என்றாலும், ஆசிரியரின் கதையோட்டம் எளிய மக்களிடயே நிகழும் வாழ்க்கைப் போராட்டங்களை கண்முன் நிகழ்வதாகக் காட்டப்பெற்றுள்ள இந்நூல் பல பதிப்புகள் வெளிவந்திருந்தாலும், ஓலைச்சுவடிகளோடு ஒப்பீடு செய்யப்பெற்று இப்பாடிலின் சொற்பொருள், பொழிப்புரை, குறிப்புரை, பாடவேறுபாடு என்பதாக இப்பதிப்பு அமைந்துள்ளது. விலை ரூ.250/-.



முத்துநாச்சி சண்டை

ASIN  :  B0DJ9XYK3R

கட்டபொம்மன் - ஊமைத்துரையின் சகோதரியான முத்துநாச்சியானவள் ஊமைத்துரை ஆங்கிலேயருடன் போருக்குப் போவதற்கு முன் ஆங்கிலேயருடன் இரண்டு நாள்கள் போரிட்டவள் முத்துநாச்சி. முத்துநாச்சி போரிட்ட விதங்கள் பற்றி இக்கதைப்பாடல் 892 அகவலடிகளில் எடுத்துரைக்கிறது.  ஓலைச்சுவடியிலிருந்து இந்நூல் பதிப்பிக்கப்படுகிறதுவிலை ரூ.100/-.


முத்துமாலையம்மன் கதை


ASIN: B0DQ1ZN1WG

தூத்துக்குடி மாவட்டம் குரங்கனி முத்துமாலையம்மன் கோயில் வரலாற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்ட புராணப் பின்னணியுடன் கொண்டதாக அமைந்துள்ள முத்துமாலையம்மன் கதையை ஓலைச்சுவடியில் இருந்து முதன் முதலாகப் பதிப்பிக்கப்பெறுகிறது.  இதன் விலை ரூ.250/-.


மேகக் கண்ணீர் (குறுநாவல்)

ASIN  :  B0DFHCHQSV

பெற்றோர் மாற்றங்களால் இரண்டு காதல் ஜோடிகளின் இறுதி முடிவு பற்றி எடுத்துரைக்கும் குறுநாவலே மேகக் கண்ணீர். சமுதாயத்தில் முறை மாறிய காதல் எங்கோ ஒன்று தெரிந்தும் தெரியாமலும் நிகழ்வது தான் என்றாலும் இக்கதையில் வரும் இரண்டு ஜோடிகளின் முறை மாறிய காதலின் இறுதியான முன்னுரை எழுதும் முன் முடிவுரை எழுதிய கதையின் இக்குறுநாவல் எடுத்துரைக்கிறதுவிலை ரூ.60/-.


யாழ்ப்பாண வைபவம்

ASIN  :  B0F8C5FG2R

ஓலைச்சுவடியில் எழுத்தப்பெற்றுள்ள பண்டைய யாழ்ப்பாண வரலாற்றினை எடுத்துரைக்கும் நூலாக யாழ்ப்பாண வைபவம் அமைந்துள்ளது. இந்நூல் மாலை என்ற இலக்கிய வகையை உணர்த்துதலின், இது மாலை இலக்கியமன்று. வைபவம் என்பது வரலாற்றினை உணர்த்துவதுஉரைநடையில் அமைந்தது. விலை ரூ.100/-.



வடிவுடையம்மன் பிள்ளைத்தமிழ்

ASIN  :  B0DK79KSSC

ஆதிபுரி அல்லது ஆதிமாபுரி என்று வழங்கக் கூடிய திருவொற்றியூரில் கோயில் கொண்டுள்ள வடிவுடையம்மன் மீது பாடப்பெற்ற திருவொற்றியூர் வடிவுடையம்மன் பிள்ளைத்தமிழ் என்று வழங்கக் கூடிய வடிவுடையம்மன் பிள்ளைத்தமிழ் ஓலைச்சுவடியிலிருந்து இங்குப் பதிப்பிக்கப்பெறுகிறது. இதனை ஆதிமாபுரி வடிவுடையம்மன் பிள்ளைத்தமிழ் என்றும் வழங்குவர். இந்நூலைக் கனகசபைத் தம்பிரான் இயற்றியுள்ளார். இதன் முதல் பதிப்பு 1887ஆம் ஆண்டு ஊ.புஷ்பரதஞ் செட்டியார் அவர்களால் பதிப்பிக்கப்பெற்றிருக்கிறது.  இந்நூல் இன்று கிடைக்காமையால் ஓலைச்சுவடியிலிருந்து பதிப்பிக்கப்பெறுகிறதுவிலை ரூ.100/-.


வர்ம சூத்திரம்

  • ASIN ‏ : ‎ B0F5NNCCJS

இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஒன்றே ஆயுர்வேத மருத்துவ முறை. இந்த மருத்துவத்தின் நோக்கம் மனித உடல், மனம் மற்றும் ஆன்மாவின் சமநிலையைப் பராமரிப்பது ஆகும். இந்த முறையில் பலவிதமான சிகிச்சைகள் உள்ளன. அவற்றில் ஒன்றே வர்ம சிகிச்சை ஆகும். வர்ம சிகிச்சை என்பது மனித உடலில் உள்ள முக்கியமான புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு, அவற்றின் மூலம் நோய்களை தீர்க்கும் முறையாகும். இம்முறைகளை விளக்கும் ஓலைச்சுவடிகள் நிறைய இருக்கின்றன. அவற்றில் ஒன்றே வர்ம சூத்திரம். ஓலைச்சுவடியில் வெளிவரும் இந்நூல், ஓலைச்சுவடியில் உள்ளவாறே பதிப்பிக்கப்பட்டுள்ளது. விலை ரூ.100/-.


வல்லான் காவியம்


  • ASIN ‏ : ‎ B0DV4VGYF8

ஓலைச்சுவடியில் இருந்து முதன் முதலில் வல்லான் காவியம் வெளிவருகிறது. வல்லானுக்குக் கப்பம் கட்ட முடியாது என்று சோழநாட்டு அரசன் திரிபராந்தகன் வல்லான் மீது போர் தொடுக்க முனையும்போது செங்குந்தர் இனத்தவரில் பன்னிரண்டு கைக்கோளர்கள் வல்லானை வென்று வருவதாகக் கூறி, சோழ மன்னனிடம் அனுமதி பெற்றுச் சென்று வல்லானை வென்று வந்து, தாங்கள் எடுத்துக் கொண்ட உறுதிமொழியின் அடிப்படையில் எஞ்சி இருந்து வீரனும் நாராயணனும் தங்களது உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். அவர்களின் நினைவாக வீரநாராயணபுரம் (இன்று காட்டுமன்னார்கோயில், கடலூர் மாவட்டம) என்ற ஊரினையும் அவ்வூரில் வீரநாராயணப்பெருமாள் கோயிலையும் அக்கோயிலை அடுத்து வீரநாராயண ஏரியையும் உருவாக்கினான் சோழ மன்னன் திரிபராந்தகன். இவ்வேரியே இன்று சென்னைக்குக் குடிநீர் வழக்கத்தக்கதாக உள்ள வீராணம் ஏரி. விலை ரூ.100/-.


விக்கிரமாதித்தன் கதை

  • ASIN ‏ : ‎ B0F5NGPMCK
  • மக்களிடையே பரவலாகப் பேசப்படும் ஒரு கதை விக்கிரமாதித்தன் கதை. போசராசாவுக்கு விக்கிரமாதித்தனின் சிம்மாசனத்தில் ஏறி ஆட்சி செய்வதற்குப் பதுமைகள் தடையாக இருக்கின்றன. விக்கிரமாதித்தனைப்போல் நீ செயற்பட்டால் இச்சிம்மாசனத்தில் ஏறலாம் என்று முப்பத்திரண்டு பதுமைகள் ஒவ்வொரு முறை போசராசா சிம்மாசனம் ஏற வரும்போது கூறுவதாக அமைந்துள்ளது. இக்கதைகள் ஓலைச்சுவடிகளில் பதிப்புகளிலும் பலவேறு வகைப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது. இக்கதை ஓலைச்சுவடியில் உள்ளதை உள்ளவாறே பதிப்பிக்கப்பெறுகிறது. விலை ரூ.200/-.


விழித்தெழு...

ASIN  :  B0CY6JHC5Q

விழித்தெழு மாணவா, மாணவர்கள், விடுதி வாழ்க்கை, பனித்துளிகள், ஆராதனை, அகம், தமிழ்மொழி, சென்னை பச்சையப்பன், முடிவு எடுப்போம், திருப்பூர் குமரன், இயேசு நாதர், மகாத்மா காந்தி, நேரு மாமா, பார் போற்றும் பாவலரேறு, கடமை, திண்டாட்டம், செல்லப் பிள்ளை வருகை, வாழ்த்துக்கள், பறக்கும் கம்பளம், சின்ன பாப்பா, சக்தி தாயே, தமிழுக்கு உயிர்க்கொடு, தாலாட்டு, புத்தாண்டு வரவினிலே, என் மௌ நெஞ்சம், கூட்டல் எங்கே, இதோ காண், இதுவும் இயல்புகளே, காதலின் கோலங்கள், உன் அன்பு, மன மாற்றம், நாங்கள் இப்படி, இந்த நிலை வேண்டுமா?, தமிழா இப்படி இரு, அருகானேனே, வறட்சி வாழ்க்கை, ஏனொளிந்துக் கொள்கின்றாய்?, என்ன செய்வீர்கள்?, காதலுண்டு, தெய்வம் உருவாகியது, இப்படி இருந்தால், சேர்ந்தால், என்ன வந்ததோ, அங்கே தான் தெரியும், வளரும் தமிழ், இவனும் இந்நாட்டு மைந்தன், தலைகீழ் தொடக்கம், விடிவு, இன்ப வாழ்வு, தெளிவு, முத்தம், என்நிலை, புறப்பட்டேன் புதிய உலகம் படைக்க, நானல்ல, உண்மையின் விலை, உதையுங்கள் திறக்கப்படும், எனது எழுதுகோல், சுதந்திரப் பெருச்சாலி, தேங்காய் அரசியல், முகவரி இல்லாதவன், இந்நாட்டுப் பிரதிநிதிகள், நட்சத்திரம் போன்ற சமுதாய விழிப்புணர்வு மற்றும் காதல் தொடர்பான பல கவிதைகளின் தொகுப்பாக விழித்தெழு என்னும் கவிதைத் தொகுப்பு அமைந்துள்ளது. விலை ரூ.100/-.


குறிப்பு : மேற்காணும் மின்நூல்கள் (Kindle Direct Publishing - KDP) அமெசான் வலைத்தளம் சென்று மேலே கூறியுள்ள நூலின் அட்டைப் படத்திற்குக் கீழே குறிப்பிடப்பெற்றிருக்கும் ASIN என்ற குறியீட்டு எண்ணை அமெசான் வலைத்தளப் பக்கத்தில் உள்ளீடு செய்து உரிய முறைப்படி பெற்றுக் கொள்ளலாம்.