செவ்வாய், 19 நவம்பர், 2019

தமிழ்ச் சுவடிகளில் எழுத்து




          சைகையாக, ஒலிப்பாக இருந்த கருத்துப் பரிமாற்றம் பின்னாட்களில் வரிவடிவம் பெறத் தொடங்கியது.  இவ்வரிவடிவம் மொழிக்கு மொழி வேறுபடும்.  தமிழ் மொழியில் இவ்வரிவடிம் எழுத்துகளாகவும் குறியீடுகளாகவும் அமைக்கப் பெற்றமையை அறிய முடிகிறது.  தமிழ் மொழியில் எண்களும் எழுத்துகளும் எழுத்துகளாக-குறியீடுகளாக அமைக்கப்பெற்றமையைக் காணமுடிகிறது.  அவ்வெழுத்துகளும் குறியீடுகளும் ஓலைச்சுவடியில் அமைந்திருக்கும் நிலை குறித்து இங்குத் தெரிந்து கொள்ளலாம்.           
சுவடிகளில் எழுத்துகளும் குறியீடுகளும்
            தமிழ்ச் சுவடிகளில் எழுத்து, குறியீடு என இரண்டு வகை உண்டு.  தனியெழுத்து எழுத்தாவதும், ஒன்றுக்கும் மேற்பட்ட குறியீடுகள் இணைந்து எழுத்தாவதும் உண்டு.  எழுத்தாவது, எல்லா சொற்களுக்கும் வருவதான எழுத்தாகும்.  இவ்வகையில் முதலெழுத்து, சார்பெழுத்து அமையும்.  குறியீடு எனப்படுவது, ஒரு குறிப்பிட்ட சொல், எண், அளவு ஆகியவற்றிற்கு மட்டும் வருவதாகும்.  இவ்வகையில் அலகெழுத்து, கூட்டெழுத்து, குறிப்பெழுத்து அமையும். அவை பற்றி இனிக் காண்போம்.
எழுத்துகள்
            தமிழ்மொழியில் எழுத்துகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.  ஒன்று, முதலெழுத்து, மற்றொன்று சார்பெழுத்து என அவை அமையும்.
முதலெழுத்துகள்
            உயிரெழுத்து, மெய்யெழுத்து என முதலெழுத்து இரண்டு வகைப்படும்.  , , , , , , , , , , , ஆகிய பன்னிரண்டும் உயிரெழுத்து என்றும்;  க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் ஆகிய பதினெட்டும் மெய்யெழுத்து என்றும் கூறுவர்.  தமிழ்ச் சுவடிகளில் உயிரெழுத்து பன்னிரண்டில் , , , , , , , ஆகிய எட்டும் அவ்வவ்வெழுத்தின் தனித்தன்மையுடனும், உயிரெழுத்தில் இடம்பெறாத , , , ஆகிய நான்கும் தன்னுடைய தனித்தன்மை இல்லாமல் ஒரு மயக்க நிலையிலும் தமிழ்ச்சுவடிகளில் அமைந்திருக்கும்.
 ஊகார ஒளகார எழுத்தின் நிலை
உகரமும் ஒகரமும் ளகரத்தை உடன்பெற்றுஉளஎன்று ஊகாரமாகவும், ‘என்று ஔகாரமாகவும் அமைந்திருக்கும். சுவடியெழுதும் முறையில்எழுதுவதில் சில இடர்ப்பாடுகள் நேரிடுகின்றன.  அதாவது, சுவடியில் எழுத்து எழுத எழுத ஓலை எழுத்தின் அளவிற்கேற்ப இடமாக நகர்ந்துவிடும்.  இதனடிப்படையில்எழுதும் போது உகரம் எழுதியதற்கான எழுத்திடம் ஓலையில் இடமாக நகர்ந்திருக்கும்.  உகர எழுத்தில் அமைந்திருக்கும் படுக்கைக்கோட்டின் நடுவே ளகரம் சேர்ந்தால்தான் அது ஊகாரமாகும். ஆனால், ஓலை உகர எழுத்தளவு இடமாக நகர்ந்துவிட்டதால் மீண்டும் அவ்வோலையை வலமாக இழுத்து எழுதுவது என்பது மிகவும் கடினம்.  எனவே, உகரத்தை அடுத்து ளகரத்தை அமைத்தனர். 
புள்ளி எழுத்தின் நிலை
எகர ஏகாரம், ஒகர ஓகாரம் ஆகியவற்றிற்கு மட்டும் குறில்-நெடில் வேறுபாடு காட்டாமல் அமைந்திருக்கும். மெய்யெழுத்து பதினெட்டும் புள்ளியில்லாமல் அகரமேறிய உயிர்மெய் போன்றே அமைந்திருக்கும்.
            மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்
                                                                        (தொல். எழுத்து. நூ.15)
            எகர ஒகரத் தியற்கையும் அற்றே
                                                                        (தொல். எழுத்து. நூ.16)
என்னும் தொல்காப்பியரின் வழக்குப்படி எகரமும் ஒகரமும் புள்ளிபெறும் என்பதால் தொல்காப்பியர் காலத்தில் எகர ஒகரங்களின் மீது புள்ளி(சுழி) வைத்து எழுதினால் குறிலெழுத்து என்றும், புள்ளி(சுழி) இன்றி எழுதினால் நெடிலெழுத்து என்றும் கொண்டனர்.
            புள்ளிவைத்து எழுதினால் ஓலையில் ஓட்டை(துளை)விழும் என்னும் கருத்து நிலவுகின்றது.  இது பொருந்துவதன்று.  அண்மைக்காலத்தில் எழுதப்பெற்ற சில சுவடிகளில் புள்ளிவைத்து எழுதப்பெற்றுள்ளதைக் காணமுடிகிறது.  இதனைப் பார்க்கும்போது தொல்காப்பியரின் வழக்குப்படி தமிழ்ச்சுவடிகளில் பழங்காலத்தில் புள்ளிவைத்து எழுதியிருக்கின்றனர் என்பது தெரிகின்றது.  பழங்காலத்திலும் அண்மைக் காலத்திலும் தமிழ்ச்சுவடிகளில் புள்ளிவைத்து எழுதும் வழக்கம் இருந்திருக்கும் போது புள்ளியில்லா எழுத்து தமிழ்ச்சுவடிகளில் எப்படி வந்தது என்பதை ஆராயவேண்டும்.
            தி.நா. சுப்பிரமணியம் அவர்கள்கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு வரை புள்ளியிட்டு எழுதும் வழக்காறு இருந்தது.  அதன்பிறகே அவ்வழக்காறு கைவிடப்பட்டுப் புள்ளியின்றி எழுதும் நிலை உருவாகியுள்ளதுஎன்கின்றார்.  இக்கருத்தை மெய்ப்பிக்கும் விதமாக எஸ். சௌந்தரராஜன் அவர்கள்ஏழு, எட்டு, ஒன்பதாம் நூற்றாண்டுகளில் தமிழ்மொழியில் வடமொழியின் தாக்கம் மிகுதியாகிவிட்டது.  அதனால் கிரந்த எழுத்துகள் தமிழ்மொழியில் கலக்கத் தொடங்கின.  புள்ளியிட்டு எழுதும் வடிவம் கிரந்த எழுத்துகளுக்குக் கிடையாது.  கிரந்தம் தெரிந்தவர்கள் தமிழ்ச் சுவடிகளை எழுதும் பொழுது சிறிது சிறிதாகச் சில கிரந்த எழுத்துகளையும், புள்ளியின்றி எழுதும் கிரந்த எழுத்து முறைகளையும் சுவடிகளில் புகுத்திவிட்டனர்என்கின்றார்.
            இக்கூற்றுகளின்படி புள்ளிவைத்து எழுதும் வழக்கம் அற்றுப்போனதால் எகர ஏகார வேறுபாடும், ஒகர ஓகார வேறுபாடும் இன்றி சுவடியில் ஒன்றுபோல எழுதத் தொடங்கினர்.  இவ்வாறு புள்ளியின்றி எழுதுவதால் எழுதும் வரிகளும் ஓலைகளில்  அதிகமாவதைக் கண்டவர்கள் இம்முறையையே பின்பற்றத் தொடங்கியிருக்கின்றனர்.  மேலும் எழுத்து எழுதும்போது எழுதப்பெற்ற எழுத்தின் மேல் நடுவில் புள்ளி (சுழி) வைக்க வேண்டும்.  ஆனால், எழுதப்பெற்ற எழுத்தின் அளவிற்கேற்ப ஏடு இடம்பெயர்ந்து விடுவதாலும், எழுதப்படும் எழுத்தினை எழுதுபவர் பார்க்க முடியாததாலும், வெள்ளெழுத்தாக்க் கீறப்படுவதாலும் எழுதப்பெற்ற எழுத்தின் மேல் நடுவில் புள்ளி (சுழி) வைப்பதில் சிக்கல் தோன்றுகிறது.  அப்படியே புள்ளி (சுழி) வைத்தாலும் ஏற்கெனவே எழுதப்பெற்ற மேல் வரியின் எழுத்தின் மீதுதான் புள்ளி (சுழி) இட வேண்டியதிருக்கும்.  இல்லையேல் அதே வரியில் எழுத்து எழுதுவதற்கு முன்போ அல்லது எழுத்து எழுதியதற்குப் பின்போ புள்ளி (சுழி) இடவேண்டும்.  ஏட்டிற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டவிடத்து மாற்று எழுத்து வரிவடித்தில் புள்ளி இன்றி எழுதியதைக் கண்டவர்கள் தங்கள் எழுத்து வரிகளுக்கும் பயன்படுத்தியிருக்கலாம்.  இந்நிலையில் தான் ஓலையில் புள்ளி எழுத்துக்களைப் புள்ளியின்றி எழுத்துக்களை எழுதியிருக்கின்றனர்.
            உயிரெழுத்தில் எகர ஒகரங்களைப்போல் அதனதன் உயிர்மெய்களுக்கும் புள்ளியெழுத்துக்கள் அமைந்திருக்கும்.  அதுபோல் பதினெட்டு மெய்யெழுத்துக்களும் புள்ளி பெற்றிருக்கும்.
பெஸ்கி என்னும் வீரமாமுனிவர் (கி.பி.1680-1742) அவர்கள் கி.பி.1710இல் இந்தியாவிற்கு வருகை புரிந்தார்.  அவர் வந்த சில ஆண்டுகளில்கொடுந்தமிழ் இலக்கணம்என்னும் நூலை யாத்தார்.  இவற்றில் இதுநாள் வரை தமிழெழுத்தில் இருந்து வந்த சில இடர்ப்பாடுகளைக் களைய முற்பட்டிருக்கின்றார்.  இவற்றில் எகர ஒகர வேறுபாடும் அமையும்.  புள்ளியின்றி எழுதிய எகர () ஒகர ()ங்களைக் குறில் உயிர் என்றும், எகர ஈற்றில் இடமாக சிறிய சாய்வுக்கோடு இட்டால் ஏகாரம்() என்றும், ஒகர ஈற்றில் வலமாச் சுழித்தால் ஓகாரம்() என்றும் கொண்டார்.  இம்முறை இன்றுவரை நடைமுறையில் இருந்துவருகின்றது.
சார்பெழுத்துகள்
            உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலிகரம், குற்றியலுகரம், ஐகாரக்குறுக்கம், ஔகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம் ஆகிய பத்தும் சார்பெழுத்துகள் எனப்படும்.  இவற்றில் உயிர்மெய், ஆய்தம் ஆகிய இரண்டு வகையான சார்பெழுத்துகள் மட்டும் வரிவடிவ நிலையில் அமையக் கூடியவை.  ஏனையவை ஒலிப்பு முறையில் அமைவனவாகும்.  வரிவடிவ நிலையில் அமையும் சார்பெழுத்துகள் (ஆய்தம், உயிர்மெய்) இருநூற்றுப்பதினேழில் ஒருவரிவடிவ எழுத்து, இருவரிவடிவ எழுத்து, மூவரிவடிவ எழுத்து என மூன்று வகையான வரிவடிவ எழுத்துகள் அமைந்திருக்கும். இவ்விருநூற்றுப் பதினேழில் தமிழ்ச்சுவடிகளில் 97 எழுத்துகள் தனித்தன்மையுடனும், உயிர்மெய் எழுத்துகளுக்கான பொதுக்குறியீடு ஆறு (, ி ,  , , , )ம் அமைந்திருக்கும்.  அவை பின்வருமாறு:
            அகர உயிர்மெய்யில் . , , , , , , , , , , , , , , , , ஆகிய 18ம்; ஆகார உயிர்மெய்யில்   ணா, றா, னா ஆகிய இம் மூன்றும் துணைக்கால் இல்லாமல் , , ஆகியவற்றின் ஈற்றுப் பகுதி கீழ் நோக்கி வளைத்து மேல் வர அவ்வற்றின் நெடிலாகும்; இகர உயிர் மெய்யில் கி, ஙி, சி, ஞி, டி, ணி, தி, நி, பி, மி, யி, ரி, லி, வி, ழி, ளி, றி, னி ஆகிய 18ம்; ஈகார உயிர்மெய்யில் கீ, ஙீ, சீ, ஞீ, டீ, ணீ, தீ, நீ, பீ, மீ, யீ, ரீ, லீ, வீ, ழீ, ளீ, றீ, னீ ஆகிய 18ம்; உகர உயிர்மெய்றில் கு, ஙு, சு, ஞு, டு, ணு, து, நு, பு, மு, யு, ரு, லு, வு, ழு, ளு, று, னு ஆகிய 18ம்; ஊகார உயிர்மெய்யில் கூ, ஙூ, சூ, ஞூ, டூ, ணூ, தூ, நூ, பூ, மூ, யூ, ரூ, லூ, வூ,, ழூ, ளூ, றூ, னூ ஆகிய 18ம்; ஐகார உயிர்மெய்யில் உகரத்து அடியினைச் சிறிதுமேல் வலம்கொணர்ந்து அதனொடு ணகரம், லகரம், ளகரம், னகரம் சேர்த்தால் ணைகாரம், லைகாரம், ளைகாரம், னைகாரம் ஆகும்; ஆய்தம் ()1ம் ஆகத் தொண்ணூற்றெட்டு எழுத்துகளும் தமிழ்ச் சுவடிகளில் ஒரு வரிவடிவ எழுத்துகளாக அமைந்திருக்கும்.
            உயிர்மெய் எழுத்துக்களுக்கேயுரிய பொதுக் குறியீடுகளாக கோடு அல்லது கொம்பு(), இணைகோடு அல்லது இருகோடு (இணைகொம்பு அல்லது இருகொம்பு) (ெெ, ) ஆகியன தமிழ்ச் சுவடிகளில் அமைந்திருக்கும்.  மேலும், ரகரம் காலாகவும்(), ளகரம் ஔகாரத்தைக் குறிக்கும் மூவரிவடிவத்தின் மூன்றாவது எழுத்தாகவும்() அமைந்து உயிர்மெய் எழுத்துகளுக்கான குறியீடுகளாக அமைந்திருக்கும். 
            அதாவது, அகர உயிர்மெய்யை அடுத்து புள்ளி அல்லது கால் (-இது தமிழ்ச்சுவடிகளில் ரகரமாகவும் வழங்கப்பெறும்) பெற்று கா, ஙா, சா, ஞா, டா, தா, நா, பா, மா, யா, ரா, லா, வா, ழா, ளா ஆகிய 15ம் ஆகார உயிர்மெய்யாகவும்; அகர உயிர்மெய்க்கு முன் கொம்பு() பெற்று கெ, ஙெ, செ, ஞெ, டெ, ணெ, தெ, நெ, பெ, மெ, யெ, ரெ, லெ, வெ, ழெ, ளெ, றெ, னெ ஆகிய 18ம் எகர உயிர்மெய்யாகவும்; ஆகார உயிர்மெய்க்கு முன் கொம்பு() பெற்று ஆகிய 3ம் ஒகர உயிர்மெய்யாகவும் அமைந்த 36 வகையான எழுத்துகள் இருவரிவடிவ எழுத்துகளாக அமைந்திருக்கும்
            அகர உயிர்மெய்க்கு முன் கொம்பு()ம் ஈற்றில் காலும்() பெற்று கொ, ஙொ, சொ, ஞொ, டொ, தொ, நொ, பொ, மொ, யொ, ரொ, லொ, வொ, ழொ, ளொ ஆகிய 15ம் ஒகர உயிர்மெய்யாகவும்; அகர உயிர்மெய்க்கு முன் கொம்பும்() ஈற்றில் ளகரமும் பெற்று கௌ, ஙௌ, சௌ, ஞௌ, டௌ, ணௌ, தௌ, நௌ, பௌ, மௌ, யௌ, ரௌ, லௌ, வௌ, ழௌ, ளௌ, றௌ,  னௌ ஆகிய 18ம் ஔகார உயிர்மெய்யாகவும் அமைந்த 33 வகையான எழுத்துகள் மூவரிவடிவ எழுத்துகளாக அமைந்திருக்கும்.
            அகர உயிர்மெய்க்கு முன் இருகொம்பு அல்லது இருகோடு(ெெ, ) பெற்று ெகெ-கை, ெஙெ-ஙை, ெசெ-சை, ெஞெ-ஞை, ெடெ-டை, ெதெ-தை, ெநெ-நை, ெபெ-பை, ெமெ-மை, ெயெ-யை, ெரெ-ரை, ெவெ-வை, ெழெ-ழை, ெறெ-றை ஆகிய 14ம் மூவரிவடிவம் மற்றும் இருவரிவடிவம் தாங்கிய எழுத்தாகத் தமிழ்ச்சுவடிகளில் அமைந்திருக்கும்.  உயிரெழுத்தில்எகர ஒகரம்புள்ளிபெற்று வரும் என்று கூறிய தொல்காப்பியரின் கூற்றுக்கு உரைவரைந்த நச்சினார்க்கினியர் எகர ஒகர உயிர்மெய்களுக்கும் இக்கூற்று பொருந்தும் என்கின்றார். 
            தமிழ்ச்சுவடிகளில் கி.பி.12ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு புள்ளிவைத்து எழுதும் வழக்கம் இல்லாததாலும், இன்று நமக்குக் கிடைக்கக் கூடிய தமிழ்ச்சுவடிகள் கி.பி.15ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட சுவடிகளானதாலும் சுவடிகளில் புள்ளியெழுத்துகள் காணப்பெறவில்லை எனலாம்.  எனவே, தமிழ்ச் சுவடிகளில் எகர-ஏகாரம், ஒகர-ஓகாரம் வேறுபாடு தெரியாதது போல் எகர-ஏகார உயிர்மெய் எழுத்துகள் 18ம், ஒகர-ஓகார உயிர்மெய் எழுத்துகள் 18ம் ஆக 36 உயிர்மெய் எழுத்துகளும் குறில்-நெடில் வேறுபாடின்றி அமைந்திருக்கும். 
            இவ்வேறுபாடுகளைக் களைவதற்கு வீரமாமுனிவர் அவர்கள் அரும்பாடுபட்டிருக்கின்றார்.  அவர் தம்முடையகொடுந்தமிழ் இலக்கணம்என்னும் நூலில், குறிலுக்கும் நெடிலுக்கும் ஒரே மாதிரியாக எழுதப்பட்டு வருகின்ற கொம்பு என்று சொல்லப்படுகிறஇந்த எழுத்து குற்றெழுத்தைக் குறிக்கவும், இக்கொம்பை மேலே சுழித்து வருகிறஇந்த எழுத்து நெட்டெழுத்தைக் குறிக்கவும் பயன்படுத்தவேண்டும் என்று கூறியிருக்கின்றார்.  இவரின் இக்கருத்தினை ஏற்றுக்கொண்ட தமிழர்கள் அதன்பிறகு எழுதப்பெற்ற சுவடிகளில் இவ்வேறுபாட்டைக் காட்டியிருக்கின்றனர் எனலாம்.  இவ்வேறுபாடு களைந்ததை நிலைநிறுத்தும் விதமாக வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்அறுவகை இலக்கணம்என்னும் நூலில் 247 எழுத்துகளுக்கும் வரிவடிவ இலக்கணம் கூறியிருக்கின்றார்.  குறிப்பாக, அகர உயிர்மெய் எழுத்துகள் 18க்கும் தனித்தனியாக வரிவடிவ இலக்கணம் கூறிய வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அதன்பிறகான உயிர்மெய் எழுத்துகளுக்குப் பொதுவான குறியீட்டின் வரிவடித்தைக் கூறுகின்றார்.
            இவற்றையெல்லாம் பார்க்கும்போது தமிழ்ச் சுவடிகளில் அமையக்கூடிய எழுத்துகளில் ஏறக்குறைய 4இல் 1பங்கு எழுத்துகள் (247இல் 57 எழுத்துகள்) மட்டுமே குழப்ப நிலையில் அமைந்திருக்கின்றன எனலாம்.  அதாவது, புள்ளி வைக்காததால் 56 எழுத்துகளும் (மெய்-18, உயிர்-2, எகர உயிர்மெய்-18, ஒகர உயிர்மெய்-18), எழுதும் முறையில் ஊகாரமும்(உள) ஆக 57 எழுத்துகள் மட்டுமே குழப்ப நிலையில் அமைந்திருக்கின்றன.  பாடல் மற்றும் பாட்டும் உரையும் கொண்ட சுவடிகளைப் படிக்கும் போதும் படியெடுக்கும் போதும்  யாப்பையும் பொருளையும் மனதில் கொள்ளவேண்டும். உரைநடைச் சுவடிகளைப் படிக்கும் போதும் படியெடுக்கும் போதும்  பொருள் பொருந்தப் படிக்கவும் படியெடுக்கவும் வேண்டும்.
தமிழ் எழுத்தின் வரிவடிவ அமைப்பு
            தமிழ் எழுத்தின் வரிவடிவம் ஒரு எழுத்தில் இன்னொரு எழுத்து இருப்பது தெரியும்.  அதுபோல் அடியொற்றி வரும் எழுத்துக்கள் பின்வருமாறு எடுத்துரைக்கலாம்.
            அகர உயிர்மெய்யில் துணைக்காலை அடியொற்றி , , , , , , ஆகிய ஏழு எழுத்துக்களும்; எகரத்தை அடியொற்றி என்ற ஒரு எழுத்தும்;  டகரத்தை அடியொற்றி, , , , ழ ஆகிய ஐந்து எழுத்துக்களும்; - ஒற்றைக் கொம்பை அடியொற்றி ண, , , , ன ஆகிய ஐந்து எழுத்துக்களும் ஆகப் பதினெட்டு எழுத்துக்களின் வரிவடிவம் அமைந்திருக்கின்றன.
            ஆகார உயிர்மெய்யில் ண, , ன அகர உயிர்மெய் தவிர்த்த ஏனைய பதினைந்துக்கும் அகர உயிர்மெய்யினைத் தொடர்ந்து துணைக்கால் பெற்று வரும்.  ஏனைய மூன்றும் ஈற்றுப் பகுதி கீழ் நோக்கி வளைத்து மேல் வர இழுப்பது ஆகும்.
            இகர உயிர்மெய் பதினெட்டும் ி என்ற கீழ் விலங்கு அவ்வவ்வெழுத்தின் மேலிருந்து கீழாக பெறும்.  ஈகார உயிர்மெய் பதினெட்டும்  ீ என்ற மேல் விலங்கு அவ்வவ்வெழுத்தின் மேல் பெறும். உகர உயிர்மெய் பதினெட்டும் கீழ் விலங்கு பெறும் எழுத்துக்கள் (கு, டு, மு, ரு, ழு, ளு) ஆகவும், நெடுங்கோடு பெறும் எழுத்துக்கள் (ஙு, சு, பு, யு, வு) ஆகவும், கீழ் விலங்கும் படுக்கை மற்றும் நெடுங்கோடு பெறும் எழுத்துக்கள் (ஞு, ணு, து, நு, லு, று, னு) ஆகவும் என மூன்று நிலைகளில் அமைந்திருக்கும்.  ஊகார உயிர்மெய் பதினெட்டும் கீழ் விலங்கும் சுழியும் இணைந்து பெறும் எழுத்துக்கள் (டூ, மூ, ரூ, ழூ, ளூ) ஆகவும், நெடுங்கோடும் கீழ்விலங்கும் பெறும் எழுத்துக்கள் (ஙூ, சூ, பூ, யூ, வூ) ஆகவும், கீழ் விலங்கும் படுக்கைக்கோடும் துணைக்காலும் பெறும் எழுத்துக்கள் (ஞூ, ணூ, தூ, நூ, லூ, றூ, னூ) ஆகவும், ககரத்தோடு உகரம் இணைந்த எழுத்து (கூ) ஆகவும் என நான்கு நிலைகளில் அமைந்திருக்கும்.
            எகர ஏகார உயிர்மெய்க்கு ெ என்ற ஒற்றைக் கொம்பும், ஐகார உயிர்மெய்க்கு ை என்ற இணைகொம்பும், ஒகர ஓகார உயிர்மெய்க்கு ொ  என்ற ஒற்றைக் கொம்பும் துணைக்காலும், ஔகார உயிர்மெய்க்கு ௌ என்ற ஒற்றைக் கொம்பும் ளகரமும் பெறும்.  இவற்றையெல்லாம் நோக்கினால் தமிழில் உள்ள 247 எழுத்துக்களை எழுதுவதற்கு தனியெழுத்துக்கள் 14ம், குறியீடுகள் 8ம் ஆக 22 வகையான வரிவடிகங்களின் கூட்டே 247 வரிவடிவங்களாகத் திகழ்கின்றன எனலாம்.



,
,
ி
கு
கூ
க்
ி
ஙு
ஙூ
ங்
ி
சு
சூ
ச்
ி
ஞு
ஞூ
ஞ்
ி
டு
டூ
ட்
ி
ணு
ணூ
ண்
ி
து
தூ
த்
ி
நு
நூ
ந்
ி
பு
பூ
ப்
ி
மு
மூ
ம்
ி
யு
யூ
ய்
ி
ரு
ரூ
ர்
 
ி
லு
லூ
ல்
ி
வு
வூ
வ்
ி
ழு
ழூ
ழ்
ி
ளு
ளூ
ள்
ி
று
றூ
ற்
ி
னு
னூ
ன்
எழுத்துக்களை அடியொற்றி வரும் உயிர்மெய் எழுத்துக்கள்
- வை அடியொற்றி வரும் எழுத்து -
- வை அடியொற்றி வரும் எழுத்துக்கள், , , ,
துணையெழுத்துக்களை அடியொற்றி வரும் உயிர்மெய் எழுத்துக்கள்
- வை அடியொற்றி வரும் எழுத்துக்கள் = , , , , , ,
- வை அடியொற்றி வரும் எழுத்துக்கள்= , , , ,
247 = 22
 , , , , , , , , , , , , , = 14 எழுத்துக்கள்
0                    ி                     |   = 8 குறியீடுகள்






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக