ஞாயிறு, 7 ஜனவரி, 2024

பார் போற்றும் பாவலரேறு

 பார் போற்றும் பாவலரேறு


அமைதியின் சொரூபமாய்

ஆண்மையின் விளக்காய்

இன்பத்தின் தூணாய்

ஈகையின் வீரனாய்

உவகையின் சொந்தமாய்

ஊடியவர் உறவாய்

எழுத்தெல்லாம் கல்வெட்டாய்

ஏற்றமே தனியாளாய்

ஐந்நிலம் வாசமாய்

ஒன்றினாய் அறவோனாய்

ஓங்கிய தமிழனாய்

ஔதகம் போற்றினாய்

எழுத்தாய்வில் ஊன்றினாய்

எழுதுகோல் நாயகனாய்

கற்கையில் சிறந்தாய்

காப்பதில் முந்தினாய்

சொல்லாய்வில் திளைத்தாய்

தொல்லியம் பேசினாய்

நல்லியல்பு விளைத்தாய்

பாவலரேறு பாவலனாய்

பொருளாய்வில் புத்தனாய்

பழுதில்லா சிற்பியாய்

வழுவில்லா வளவனாய்

பார்போற்ற வாழ்ந்தவரே.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக